)
Bangladesh Air Force Jet Crash Death Toll : வங்கதேச விமான படையில் போர் பயிற்சி விமானம், அந்த நாட்டின் தலைநகரான தாக்காவில் இருக்கும் பள்ளியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கிட்டத்தட்ட 27 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம், உலக மக்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
ஹெலிகாப்டர் விபத்து:
வங்கதேச தலைநகரான டாக்காவி, மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில், வங்கதேச போர் விமானமானது நேற்று மோதியது. மதியம் 1.06 மணிக்கு F-7 BGI பயிற்சி விமானமானது, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பள்ளி கட்டடத்தில் மோதி, விபத்தை ஏற்படுத்தியது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை, வங்கதேச பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து, இதில் பலி எண்ணிக்கை, 16 என்று கூறப்பட்டது. உயிரிழந்தவர்களில், 2 பேர் ஆசிரியர்கள், பிறர் மாணவர்கள் என்று சொல்லப்பட்டது. தற்போது இது குறித்த புதிய அப்டேட் வெளிவந்து இருக்கிறது. அதன்படி, பலி எண்ணிக்கை 27 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பலியானவர்களில் 25 பேர் குழந்தைகள். 170க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய ஹெலிகாப்டர்:
விபத்தை ஏற்படுத்திய இந்த விமானமானது சீனாவின் F-7 BGI fighter jet ரகம் என்று சொல்லப்படுகிறது. ராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர், உலகின் அதிபயங்கரமான விமானங்களுள் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இதில், இரவில் தெளிவாக குறிப்பார்த்து எதிரியை தாக்குவது, அனைத்து கால நிலைகளிலும் சமநிலையுடன் செயல்படுவது என்று பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இந்த கோர விபத்துக்கும், அப்படிப்பட்ட சிறப்பம்சங்களே ஒரு வித காரணமாக அமைந்து விட்டது. இந்த விபத்துக்கான முழு காரணம் குறித்து தற்பாேது முழு வீச்சில் விசாரணை நடந்து வருகிறது.
தொடரும் துயரம்..
2025ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு கோர நிகழ்வுகள் உலகை சுற்றி நடந்து இருக்கின்றன. குறிப்பாக, கடந்த மாதம் நடந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின் தழும்பு இன்னும் மன்னை விட்டு மறையவில்லை. அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, லண்டன் நோக்கி பயணித்த அந்த விமானம், கிளம்பிய சில விநாடிகளிலேயே அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் உள்பட, சுமார் 280க்கும் மேற்பட்டோரின் உயிரை இந்த விபத்து காவு வாங்கியது.
இந்த விபத்து நடந்த சில நாட்களிலேயே, இன்னொரு விமானமும் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிரக்கப்பட்டது. இப்படி, தொடர்ந்து நடந்து வரும் விமான விபத்துகள், மக்களுக்கு பெரிய அச்சத்தை கொடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ