)
Malaysian Man Relationship With Father In Law : நாளுக்கு நாள், நாளிதழ்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகளை பார்த்தாலே, “இப்படியெல்லாம் வினோதமாக நடக்குமா?” என்று யோசிக்க தோன்றுகிறது. அப்படித்தான், தற்போது மலேசியாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
மாமனாருடன் உறவில்..
வழக்கமாக திருமணம் தாண்டிய உறவில் இருப்பவர்கள், தங்கள் பார்ட்னரை ஏமாற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கும். தன் பார்ட்னரை தாண்டி வேறு ஒருவரை பிடித்திருந்தாலும், அவர் கண்டிப்பாக எதிர்பாலினத்தவராக இருக்க நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஷேர் செய்யப்பட்ட ஒரு பதிவில் இது அப்படியே நேர்மாறாக இருக்கிறது.
அதில் ஒருவர் பகிர்ந்துள்ள விஷயம், பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. அவர் அதனை ரெடிட் தளத்தில் ஷேர் செய்து விட்டு பின்பு அது வைரலான பின்பு, அதனை டெலிட் செய்து விட்டார்.
அதில் அவர் தனது மனைவி, தங்களின் மகனுக்கு பிரசவிக்க அவரது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றிருந்ததாகவும் அப்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்திருந்தார். அப்போது, இவரது மாமனார் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக உதவி செய்யுமாறு மருமகனிடம் கேட்டுள்ளார். புதிதாக சிலர் வீட்டிற்கு வாடகைக்கு வருவதால், அவர் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
வீட்டை சுத்தப்படுத்தி முடித்த பின்பு, ரொம்பவும் சூடாக இருந்ததால் தான் சட்டையை கழற்றியதாக கூறியிருக்கிறார். பின்னர், தான் பார்க்க அசத்தலாக இருப்பதாக கூறிய மாமனார், தன்னை அருகில் வந்து தொட்டதாகவும், அப்படித்தான் பிற விஷயங்கள் நடந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
3 முறை..
தொடரும் அந்த போஸ்டில், அந்த நபர் அவரது மாமனாருடன் எப்படிப்பட்ட உறவில் இருந்தார் என்பதையும் விவரித்து இருக்கிறார். தன் மனைவிக்காக மாமனார் வீட்டிற்கு சென்றவர், அவருடனேயே மொத்தம் மூன்று முறை உறவில் இருந்ததாக கூறியிருக்கிறார். அத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆசைகள் அனைத்தையும் இதன் மூலம் தான் தீர்த்துக்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதை பற்றி யோசிக்கும் போது தனக்கு அசிங்கமாக இருப்பதாக கூறிய அவர், அது தனக்கு சுகத்தையும் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அவரிடம் இது போன்ற உறவுகள் நார்மல்தானா என்று கேட்டதாகவும், அதற்கு அவர், இதில் எந்த தவறும் இல்லை என்றும், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியில், தன்னை LGBTQ சமூகத்தை சேர்ந்தவர் என்று கூற பயமாக இருப்பதாக கூறிய அவர், இன்னொரு முறை தன்னுடன் வருமாறு மாமனார் அழைப்பதாகவும், அவரை தவிர்ப்பது எப்படி என்பது தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ