)
Donald Trump About US Tariff On India: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது Truth Social சமூக வலைதளப் பக்கத்தில் போட்டுள்ள பதிவு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
அந்த பதிவில், "ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமின்றி, வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை வெளி சந்தையில் அதிக லாபத்திற்காக இந்தியா விற்பனை செய்கிறது. ரஷ்ய போர் காரணமாக உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு (இந்தியாவுக்கு) கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு வரும் இந்தியப் பொருள்களுக்கான வரியை 25% ஆக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த வரியுடன் 10% கூடுதல் அபராதமும் அவர் விதித்திருந்தது. இன்னும் கணிசமாக உயர்த்தப்படும் என தற்போது டிரம்ப் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது நட்பு நாடாக இருந்தாலும் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாலும், இந்தியா - அமெரிக்கா இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் வர்த்தக தடையை காரணம் காட்டியும் இந்த வரி அதிகரிப்பை டிரம்ப் அறிவித்தார்.
இது இந்தியா - அமெரிக்கா உறவில் பெரும் விரிசலை உண்டாக்கியிருக்கிறது எனலாம். இருப்பினும், இந்திய பொருளாதாரத்தில் இந்த வரி விதிப்பால் பெரியளவுக்கு பாதிப்பு இருக்காது என்ற தகவல்கள் கூறுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% தாண்டி இழப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நாட்டின் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படும் என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், கடந்த சில நாள்களுக்கு முன் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவின. இதற்கு டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த தகவல்களை இந்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டது. இந்திய அரசு தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, நாட்டின் எரிசக்தி கொள்முதல் சந்தை நடவடிக்கைகள் மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டே அமையும். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டதாக எந்த தகவலும் இல்லை என கூறப்பட்டது.
சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகில் கச்சா எண்ணெய்யை அதிகளவுக்கு இறக்குமதி செய்யும் நாடு இந்தியா ஆகும். வரலாற்று ரீதியாக மத்திய கிழக்கில் இருந்து இந்தியா அதன் பெரும்பாலான கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து வந்தது. ஆனால், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான போர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவை மேற்குலகம் புறக்கணித்தன. இதனால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் வரை ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இது உலகளாவிய விநியோகத்தில் 2 சதவீதம் எனலாம். சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளே ரஷ்யாவிடம் இருந்து அதிகம் இறக்குமதி செய்வதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ