)
Ras Al Khaimah Haunted Palace Sale : உலகின், அமானுஷ்ய இடங்களில் ஒன்றாக கருதப்படும் அரண்மனை ஒன்று தற்போது விலைக்கு வந்துள்ளது.
அமானுஷ்ய அரண்மனை!
நம்மில் பலருக்கு, பேய் கதைகளை கேட்கவும், அமானுஷ்யமான விஷயங்களை பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ளவும், ஆர்வம் மிகுதியாக இருக்கும். இதில், ஒரு சில கதைகளை கேட்கும் போதே அவர் பொய் கதைகளாகதான் இருக்கும் என்பது நமக்கு தெரிந்து விடும். இருப்பினும், அந்த கதை கொடுக்கும் த்ரில்லிங்கால், அது பொய்யாக இருந்தாலும் ‘உண்மையாக இருக்க வேண்டும்’ என்று நமது மனம் விரும்பும்.
அப்படி, பல பின்னப்பட்ட அமானுஷ்ய அரண்மனையாக இருக்கிறது, துபாயில் உள்ள ரஸ் அல் கைமா. இந்த அரண்மனை குறித்தும், இதற்கு பின் இருக்கும் அமானுஷ்ய கதைகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
1985ஆம் ஆண்டு, துபாயில் கட்டப்பட்ட அரண்மனை இது. இதனை, ஷேக் அப்துலாசிஸ் பின் ஹுமாயித் அல் கஸ்மி என்பவர கட்டினார். 20,000 சதுர அடி கொண்ட இந்த அரண்மனையில், மொத்தம் 4 மாடிகள் உள்ளன. அது மட்டுமன்றி, இதில் 35 அறைகள் உள்ளன.
இஸ்லாமியர்களின் ஸ்டைலில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில், சில இந்திய பாரம்பரியங்களும் இருக்கின்றன. மார்பில் தரைகள், ஃப்ரான்ஸ் மற்றும் பெல்ஜியமில் இருந்து வரவழைக்கப்பட்ட டைல்ஸ்கள் என்று பல தனித்துவமான விஷயங்க இதில் இடம்பெற்றுள்ளன. அதைத்தாண்டி, இதன் கூரை, கண்ணாடியால் ஆனதாக இருக்கும்.
ஏன் இந்த பெயர்?
வழக்கமாக பேய் படங்களில் காட்டும் பங்களாவை பார்த்தால், அவை ஆள் அரவம் அற்ற இடத்தில், தனித்து விடப்பட்டவையாக இருக்கும். இந்த அரண்மனையும் அப்படித்தான், மலை உச்சியில், தன்னந்தனியாக இருக்கிறது. இதை விவரம் தெரியாதவர்கள் பார்த்தால், ஆச்சரியப்பட்டு ‘ஆஹா ஓஹோ’ என்பர். ஆனால் இதைப்பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், இதன் அழகுக்கு பின்னர் இருக்கும் அமானுஷ்யம் என்ன என்று.
இந்த அரண்மனையை கட்டிய மேற்கூறிய அரசரும் அவரது குடும்பத்தினரும் ஒரு நாள் கூட இங்கு தங்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இங்கு தங்கிய முதல் நாள் இரவு, பல அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்ததாகவும், அப்போது அங்கிருந்து தப்பித்து ஓடியவர்கள், மீண்டும் இதற்குள் காலடி எடுத்து வைக்கவே இல்லை என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பல கோடிக்கு விற்பனை!
கடந்த 30 வருடங்களாக, இங்கு இஸ்லாமியர்கள் அவர்களின் மதத்தில் குறிப்பிடும் ஜின் என்கிற அமானுஷ்யங்கள் இருப்பதாகவும், ஆங்காங்கே உருவம் தோன்றி மறைவதாகவும் சிலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த அரண்மனையில் அவ்வப்போது விலக்குகள் எரிந்து அணைவதாகவும், யாரோ நடந்து செல்வது போல் இருப்பதாகவும் இந்த அரண்மனைக்கு அருகில் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனையின் விலை, துபாய் மதிப்பின் படி 25 மில்லியனாம். இது இந்திய ரூபாயின் மதிப்பின் படி, ரூ.603 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.
விற்க காரணம் என்ன?
இந்த அரண்மனையை வாங்குபவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தை அதாவது துபாயை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற ரூல்ஸ் இருக்கிறதாம் இதை விற்கும் அல் ஷார்ஹான் தெரிவிக்கையில், இந்த விற்பனை ஒரு முதலீடுதன் என்றும், இந்த அரண்மனை பல கலாச்சாரம் மற்றும் வரலாறுகலை தாங்கி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இதனை வாங்குபவர், இவை அனைத்தையும் மதிப்பவராக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ