)
Iran Confirms Ceasefire: இஸ்ரேலுடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஈரான் நாட்டு அரசு ஊடகமும் தற்போது அறிவித்திருக்கிறது. அதாவது உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டு' இருந்த இரு நாட்டுக்கு இடையேயான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ட்ரம்ப் இன்று அதிகாலை அறிவித்திருந்தார். இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். அதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையான போர் முடிவுக்கு வருவதாக அவர் தெரிவித்திருந்தார். அதன்படி ஈரானிலிருந்து வரக்கூடிய ஊடக செய்திகளும் போர் நிறுத்தம் ஒப்பந்தமாகி இருக்கிறது அது தற்போது நடைமுறைக்கு வந்ததாக தெரிவித்து வருக்கின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் ஒப்பந்தம் குறித்து பார்ப்போம்.
முன்னதாக ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அதை நிராகரித்தார். இஸ்ரேலுடன் இன்னும் இறுதி போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று அவர் கூறினார். இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், ஈரானும் தாக்காது.
சிறிது நேரத்திலேயே, ஈரான் இஸ்ரேலை 6 முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்திகளின்படி, பீர்ஷெபா நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஏவுகணை விழுந்தது. தாக்குதலில் 4 பேர் இறந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார், மோதலின் போது அந்த நாடு தனது இராணுவ நோக்கங்களை அடைந்துவிட்டதாகக் கூறினார்.
ஈரான் தரப்பில் ட்ரம்ப் கெஞ்சியதால் தற்போது போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு என்பது உலக நாடுகள் மத்தியில எப்படி பார்க்கப்படும்? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
ட்ரம்ப் தான் தலையிட்டு பேச்சு வார்த்தை மூலம் இந்த போர் நிறுத்தத்திற்கு வழிவகை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். இரு நாடுகளும் தன்னிடம் வந்து இந்த போர் நிறுத்தத்திற்கு கெஞ்சியதாகவும் அதை கணக்கில் எடுத்து கொண்டுதான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஈரான் தனது நிலைப்பாட்டில் ஈரானின் தாக்குதலை இஸ்ரேல் தாக்குப்படுத்த முடியாததால் தான் அமெரிக்கா முன்வந்து இந்த இந்த போர் நிறுத்தத்திற்கு அவர்கள் வழிவகை செய்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பதாகத் தான் ஈரானிலிருந்து வரக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ