)
India Post Suspends US Parcels: வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதியில் இருந்து அமெரிக்காவுக்கான தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக இந்திய தபால் துறை இன்று அறிவித்துள்ளது. இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள வரி இந்த மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளதை அடுத்த தபால் துறை இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கு இதுவரை அளித்துவந்த வரி விலக்கை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா கடந்த ஜூலை 30ஆம் தேதி அறிவித்தது. இதன்மூலம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும், அவற்றின் மதிப்பு எதுவாக இருந்தாலும் அவை சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் வரும். இதனால் அதற்கு அதிக சுங்க வரி செலுத்த நேரிடும். 100 அமெரிக்க டாலருக்குள்ளான பரிசுப் பொருள்களுக்கு மட்டும் இனி வரி கிடையாது.
சர்வதேச விமான நிறுவனங்கள், அமெரிக்க சுங்கத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட பிற தகுதிவாய்ந்த தரப்புகள் ஆகியவை மட்டுமே அஞ்சல் ஏற்றுமதிகளுக்கான வரிகளை வசூலிக்கவும் செலுத்தவும் முடியும் என அமெரிக்கா வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சில தெளிவான முடிவுகள் எடுக்கப்படாததன் காரணமாக வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்காவுக்கு எவ்விதமான தபால் பொருள்களும் எடுத்துச் செல்லப்படாது என விமான நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.
இதைத் தொடர்ந்து, தற்போது இந்திய தபால் துறையும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்குச் செல்லக்கூடிய எந்தவிதமான தபால்களையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறாது என அறிவித்துள்ளது. கடிதங்கள், ஆவணங்கள், 100 அமெரிக்க டாலர்கள் வரை மதிப்புக்கொண்ட பரிசுப் பொருள்களுக்கு வரிகள் ஏதுமில்லை என்றும் அவற்றின் சேவைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்காவுக்கு புக்கிங் செய்யப்பட்ட பார்சல்களுக்கும் அனுப்பப்படாது என்றும் புக்கிங் செய்தவர்கள் தங்களின் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்கேன்டிநேவியா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கான தங்களின் தபால் சேவைகளை இந்த வரி விதிப்புகளால் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.
சர்வதேச பார்சல் சர்வீஸ்கள் மீது விதிக்கப்பட்ட இந்த வரி என்பது அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போதைய அவரின் 2வது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்டு சர்வதேச நாடுகளுடன் வர்த்தக மாற்றத்தின் ஒரு பகுதி என்றும் கூறலாம். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியா மீதான இறக்குமதி பொருள்களுக்கு முதலில் 25% வரியை விதித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டார். மேலும் அந்த வரியை 50% ஆகவும் உயர்த்தினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை கண்டித்து வரியை உயர்த்தியதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ