இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 2026: ட்ரம்ப்-மோடி பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்

India-US Trade Deal 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 3, 2026, 12:30 PM IST
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 2026: ட்ரம்ப்-மோடி பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்

End of Tariff Tensions?: இந்தியா மீது ரெசிப்ரோக்கல் டேரிஃப்-ஐ 25% லிருந்து 18% ஆக உடனடியாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சமீபத்திய தொலைபேசி உரையாடல் மற்றும் அதைத் தொடர்ந்து ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.  பிப்ரவரி 2, 2026 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Add Zee News as a Preferred Source

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை:

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor), பிப்ரவரி 2, 2026 அன்று மாலை 5:15 மணியளவில், அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் பேசினார் என்ற தகவலைப் பகிர்ந்து, மேலதிக தகவல்களுக்குக் காத்திருக்குமாறு தெரிவித்தார். இதற்குப் பிறகு, டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் தொடர்ச்சியாக மூன்று பதிவுகளை வெளியிட்டார்.

முதல் பதிவு: 'நியூஸ் மேக்கர்ஸ் ஆஃப் தி இயர் 2025' இதழின் அட்டையைப் பகிர்ந்து கொண்டார். அதில் மோடியும் ட்ரம்ப்பும் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாம் பதிவு: டெல்லியில் உள்ள இந்தியா கேட் புகைப்படத்தைப் பகிர்ந்து, இது ஒரு அழகான 'வெற்றி வளைவு' (Triumphal Arch) என்று புகழ்ந்தார். மேலும், அமெரிக்கா இதைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மூன்றாம் பதிவு: இரவு 10:28 மணியளவில், இரு நாட்டு உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த விரிவான பதிவை வெளியிட்டார்.

ட்ரம்ப் - மோடி பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

- பல மாதப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

- அதிபர் ட்ரம்ப், இந்தியாவிற்கான பரஸ்பர வரியை (Reciprocal Tariff) 25% லிருந்து 18% ஆக உடனடியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளார்.

- இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு எதிரான வர்த்தகத் தடைகளை நீக்கி, வரியைப் பூஜ்ஜியமாக்கும்  (Zero Tariff) திசையில் செயல்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

- அடுத்த சில ஆண்டுகளில் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிலிருந்து $500 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் வகையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

- மாற்று வழிகள்: ரஷ்யாவிற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிக எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- பிரதமர் மோடியை தனது "சிறந்த நண்பர்" என்றும், "வலிமையான மற்றும் மரியாதைக்குரிய தலைவர்" என்றும் ட்ரம்ப் புகழ்ந்துள்ளார்.

- தாங்கள் இருவரும் "காரியங்களைச் செய்து முடிப்பதில் வல்லவர்கள்" (Get things done) என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

- ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25% வரியையும் அமெரிக்கா நீக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்

- பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் ரஷ்ய எண்ணெய் குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

- ஐரோப்பிய ஒன்றியத்துடனான பெரிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

- அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய தனிப்பட்ட வர்த்தகப் பங்காளியாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்தியா vs அமெரிக்கா எதிர்கால எதிர்பார்ப்புகள்:

கடந்த ஜூலை மாதமே இரு நாடுகளும் ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக இருந்தன, ஆனால் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான பிரச்சனைகளால் அது தடைபட்டது. ஆனால் தற்போது இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், தடைபட்டிருந்த குவாட் (Quad) உச்சி மாநாடு விரைவில் நடைபெறவும், அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வாஷிங்டன் சென்றிப்பது, இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முக்கியமாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க - பாலியல் தொல்லை... டிரம்பின் அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கிய சிறுமி - பின்னணி என்ன?

மேலும் படிக்க - World News | கிரீன்லாந்து முதல் ஈரான் வரை... உலகை உலுக்கும் டொனால்ட் டிரம்பின் முடிவுகள்!

மேலும் படிக்க - ராகுல் காந்தியிடம் இருந்த புத்தகம்... கடுகடுத்த மத்திய அமைச்சர்கள் - மக்களவையில் நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News