Shubhanshu Shukla: Falcon-9 ராக்கெட்டில் இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாயந்தது, SpaceX Crew டிராகன் விண்கலம். விண்ணில் பாய்ந்த பின்னர் சுபான்ஷு சுக்லா முதலில் பேசியவற்றை இங்கு காணலாம்.

Shubhanshu Shukla Axiom 4 Mission Launched: Falcon-9 ராக்கெட்டில் உள்ள மெர்லின் என்ஜின்கள் பற்றவைக்கப்பட்டு, SpaceX டிராகன் விண்கலம், கடும் தீப்பிழம்பை வெளியேற்றி அதன் விண்வெளி பயணத்தை தொடங்கியது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய Falcon-9 ராக்கெட் டிராகன் விண்கலத்தை விண்வெளியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, இந்த பயணத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக்கியது. தொடர்ந்து அது திரும்பி அதன் இடத்திற்கு வந்து நின்றது.
இரண்டாவது கட்டமாக, டிராகன் விண்கலம் முன்னோக்கிச் சென்று, அதன் வான இலக்கை நோக்கி, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி கணக்கிடப்பட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
LIVE: @Axiom_Space's #Ax4 mission, with crew from four different countries, is about to launch to the @Space_Station! Liftoff from @NASAKennedy is targeted for 2:31am ET (0631 UTC). https://t.co/yBgO8bxb6Z
— NASA (@NASA) June 25, 2025
Axiom 4 Mission: நாளை காலை சென்றடைவார்கள்
அனைத்தும் திட்டமிடப்படி நடந்தால், நாளை (வியாழக்கிழமை) காலை Axiom 4 மிஷன் குழுவினர் சுற்றுப்பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு சென்று சேர்வார்கள். தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள், ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் என மொத்தம் 7 பேர் உள்ளனர்.
Axiom 4 Mission: 15 நாள்கள் பயணம்
அமெரிக்காவின் இந்த Axiom-4 மிஷனில் இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா (Shubhanshu Shukla), போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு, அமெரிக்காவின் காமாண்டர் பெக்கி விட்சன் ஆகியோர் விண்வெளிக்கு புறப்பட்டனர். இவர்கள் 15 நாட்கள் வரை பயணம் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இவர்கள் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். அவற்றில் ஏழு பரிசோதனைகள் இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளன.
Shubhanshu Shukla: 2வது இந்தியர்
விண்வெளிக்கு பயணித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுல்ளார். இதற்கு முன் 1984ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் விண்வெளி பயணத்தில் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பயணித்தார். அவரை தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தற்போது விண்வெளிக்கு பயணித்துள்ளார்.
Shubhanshu Shukla: சுபான்ஷு சுக்லாவின் முதல் வார்த்தைகள்
டிராகன் விண்கலம் பூமியில் இருந்து 200 கி.மீ உயரத்தில் சுற்றிப் பறந்துகொண்டிருந்தபோது இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, "என் அன்பான (இந்திய) நாட்டு மக்களே, நமஸ்காரம்! ஆஹா... என்ன ஒரு பயணம்! 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளிக்கு செல்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம். நாம் வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம்" என்றார். அவர் விண்ணில் பறந்ததும் பேசிய முதல் வார்த்தைகள் இதுதான்.
Shubhanshu Shukla: சுக்லாவை வரவேற்க காத்திருப்போம்
விண்வெளிக்கு புறப்படும் சில நாள்களுக்கு முன்னர் சுபான்ஷு சுக்லா அளித்த நேர்காணல் ஒன்றில், "வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் என்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறேன்" என பேசியிருந்தார். மேலும், விண்ணில் பாய்வதற்கு தயாராகும் முன்னர் தனது குடும்பத்திற்கு அவர் தனி செய்தியை சொல்லியிருந்தார், "எனக்காக காத்திருங்கள், நான் வருகிறேன்" என சொல்லியிருந்தார். கோடிக்கணக்கான நாமும் அவரது வரவேற்பதற்காக ஆவலுடன் காத்திருப்போம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ