)
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்தான் முகமது நிஜாமுதீன் அமெரிக்கா போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இம்மாதம் தொடக்கத்தில், செப்டம்பர் 3ஆம் தேதியே நடந்துள்ளதாகவும் ஆனால் இது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு இரண்டு வாரங்களுக்கு பின்புதான் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
முகமது நிஜாமுதீன் உயிரிழந்த விஷயம் அவரது நண்பர் மூலம் செப்டம்பர் 18ஆம் தேதி குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. நான் என் மகனுக்கு பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரது தொலைப்பேசி ஸ்ட்ச் ஆஃப்பில் இருந்தது. பின்னர் தான் எனது மகன் கொல்லப்பட்ட விஷயத்தை நான் அறிந்தேன் என அவரது தந்தை ஹுஸ்னுதீன் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்தவுடன் முகமது நிஜாமுதீனின் குடும்பத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், எங்கள் மகனை அமெரிக்க போலீசார் சுட்டுக்கொன்று விட்டனர். அவரது உடல் மருத்துவமனையில் உள்ளதாக கூறினர். ஆனால், காவல்துறையினர் அவரை சுட்டதற்கான காரணத்தை எங்களிடம் கூறவில்லை என தெரிவித்திருக்கின்றனர்.
முகமது நிஜாமுதீன் தங்கியிருந்த அறையில், அவருடன் இருந்தவருடன் ஏசி தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் கைகளப்பு ஏற்பட்டதாகவும் பின்னர் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரிடமும் கையில் இருக்கும் பொருளை காட்ட சொன்னதாகவும் அப்போது முகமது நிஜாமுதீன் காட்ட மறுத்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
நிஜாமுதீன் மீது 4 தோட்டாக்கள் சுடப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் அமெரிக்க காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாக அவரது பெற்றோர் வேதனை தெரிவித்தனர். 2016ஆம் ஆண்டு புளோரிடாவில் உயர் படிப்பை தொடர அமெரிக்காவுக்கு சென்ற அவர், பின்னர் சாண்டா கிளாரவுக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சில தினங்களுக்கு முன்பாக தான் வேலை பார்க்கும் இடத்தில் இனரீதியாக ஒதுக்கப்பட்டதாக அவரது லிங்குடிங் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கூகுள் நிறுவனத்தில் தான் வேலை செய்தபோது இனரீதியான பாகுபாடுகளுக்கு ஆளானேன் என்றும் வேண்டும் என்றே என்னை பணியில் இருந்து நீக்கினர் என்றும் என்னுடைய உணவில் விஷம் வைத்தனர் என்றும் அவர் கூறி இருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ