)
Iran Attacks US Air Base In Qatar: கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் (ஜூலை 21) ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Iran Attacks al Udeid Air Base: முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளம்
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவின் அல்-உதெய்த் விமானப்படை தளம் உள்ளது. இதுதான் மேற்காசிய பகுதியில் உள்ள அமெரிக்க மிகப்பெரிய ராணுவத் தளம் எனலாம். வியூக ரீதியாகவும் இது அமெரிக்காவுக்கு முக்கியத்தும் வாய்ந்த ராணுவ தளமாகும். அதை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதலை தொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது ஈரானின் இந்த பதிலடியை உற்றுநோக்கி வருகிறார் எனலாம்.
Iran Attacks al Udeid Air Base: ஈரானுக்கு கத்தார் கடும் கண்டனம்
இந்த தாக்குதல் குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, "அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஈரானின் தாக்குதல் கத்தாரின் இறையாண்மை, வான்வெளி மற்றஉம் ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். கத்தாரில், சர்வதேச சட்டத்தின்படி இந்த அப்பட்டமான அத்துமீறலுக்கு நேரடியாக பதிலளிக்க எங்களுக்கு உரிமை உண்டு" என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் கத்தார் நாட்டின் வான் பாதுகாப்பு தாக்குதலை முறியடித்து ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Iran Attacks al Udeid Air Base: 'இது கத்தார் மீதான தாக்குதல் இல்லை'
அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல் கத்தாரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பால் நடந்ததாக ஈரானிய உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த தாக்குதல் நடவடிக்கை நட்பு மற்றும் சகோதரத்துவ நாடான கத்தார் மற்றும் அதன் உன்னத மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. மேலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு கத்தாருடன் அன்பான மற்றும் வரலாற்று உறவுகளைப் பேணுவதற்கும், அதை தொடர்வதற்கும் உறுதிபூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வெற்றிகரமான நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமம் என்றும் ஈரானிய உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
Iran Attacks al Udeid Air Base: இந்தியர்களுக்கு எச்சரிக்கை
கத்தாரின் இந்திய தூதரகம் வெளியிட்ட X தள பதிவில், "தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கத்தாரில் உள்ள இந்திய சமூகத்தினர் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டுக்குள்ளேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தயவுசெய்து அமைதியுடன் இருக்கவும். உள்ளூர் செய்திகள், அறிவுறுத்தல்கள் மற்றும் கத்தார் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். தூதரகம் எங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலமாக தொடர்ந்து அப்டேட்களை வழங்கிக் கொண்டிருப்போம்" என குறிப்பிட்டுள்ளது. கத்தார் தற்போது அதன் வான்வெளியை மூடியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ