)
Heavy Demand For Pakistan Donkeys: பாகிஸ்தானில் பொருளதாரச் சூழல் மிக மோசமாக இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். தற்போது பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சம் ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது. இதுபோல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாகிஸ்தானில் கழுதைகளும் விலையும் கூட அதிகமாகிவிட்டதாம்.
Pakistan Donkeys: உச்சத்தை தொடும் கழுதைகளின் விலை
பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் கழுதையை வண்டியில் கட்டியே பிழைப்பு நடத்தி வருகிறார். அப்பிடியிருக்க இவரின் கழுதை 'டைகர்' சில நாள்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டது. தற்போது தொழில் நடத்த வேண்டும் என்றால் அவருக்கு உடனடியாக கழுதை தேவை. ஆனால் தற்போது ஒரு கழுதையின் விலை ரூ.2 லட்சத்தையும் தாண்டியிருக்கிறது.
இது கராச்சியில் மட்டுமில்லை பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் இதுதான் நிலைமை. அப்துல் ரஷீத் தனது கழுதை 'டைகர்'-ஐ 8 வருடங்களுக்கு முன்னர் வாங்கி உள்ளார். ஆனால் இப்போது விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. ரஷீத் மட்டுமில்லை பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வருமானத்திற்கான தொழிலில் கழுதையை நம்பியே இருக்கின்றனர். இந்தளவிற்கு கழுதை விலை அதிகமாகி உள்ளது என்ன காரணம்...?
China Buying Pakistan Donkeys: கழுதைக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட்?
வழக்கமாக ஒரு பொருளுக்கு அதிக தேவை இருக்கும்போது, அதன் மதிப்பும் அதிகரிக்கும். அப்படி என்றால் பாகிஸ்தானின் கழுதைக்கு அந்தளவிற்கா டிமாண்ட் இருக்கிறது என்று கேட்டால்... ஆம், பாகிஸ்தானின் கழுதைக்கு சீனாவில் அதிக டிமாண்ட் உள்ளது. சீனாவின் பாரம்பரிய மருந்தான 'எஜியாவோ' (Ejiao) கழுதையின் தோலில் இருந்தே எடுக்கப்படுகிறது.
Pakistan Donkeys: எஜியாவோ மருந்து எதற்கானது...?
இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும், உடலில் வரும் கட்டிகளை குணப்படுத்தவும், இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவும் என நம்பப்படுகிறது. உடல் சோர்வுக்கு கூட இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என நம்பப்படுகிறது. எனவே தற்போது சீனாவில் எஜியாவோ மருந்தும் பெரியளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால், போதிய கழுதைகள் இல்லாத நிலையில் சீனா பாகிஸ்தானிடம் இருந்து கழுதைகளை எளிமையாகவும், விலை குறைவாகவும் வாங்கிக்கொள்கின்றனர்.
China Buying Pakistan Donkeys: 'டிமாண்ட் இன்னும் அதிகரிக்கும்'
இதுகுறித்து கராச்சியில் மருத்துவ மையத்தை வைத்திருக்கும் Guo Jing Feng என்னும் சீன மருத்துவர் ஊடகத்திடம் கூறுகையில், சீனாவில் கழுதைக்கான டிமாண்ட் இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கவே போகிறது என்றும் இப்போது இது உலகளவிலான வணிகம் ஆகும் என்றும் அவர் கூறினார். மேலும், சீனாவின் டிமாண்ட் தற்போது சப்ளையை விட அதிகமாகி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய கழுதை சந்தையான லியாரி சந்தையிலும் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. பாகிஸ்தானின் அப்துல் ரஷீத்தால் ரூ.1.55 லட்சத்திற்கு குறைவாக கழுதையை பார்க்கவே முடியவில்லையாம். தான் எப்படி அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியும் என்றும் வருத்தப்படும் ரஷீத், ஒருவேளை அந்த கழுதை தனது முதலீட்டை திரும்பப்பெறுவதற்கு முன்னரே இறந்துவிட்டால் தான் என்ன செய்வது என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.
China Buying Pakistan Donkeys: உள்நாட்டில் நிலவும் அதிருப்தி
பாகிஸ்தானில் கழுதை பண்ணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்க சீன அரசின் குழு, பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தது கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்துள்ளது. இந்த பண்ணையில் உள்ளூர் தொழிலாளர்களை பராமரிப்பு மற்றும் மேலாண்மை பணிக்கு பயன்படுத்த சீனா திட்டமிட்டதாகவும், இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஊக்கம் பெறும் என்று் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதற்கு பலரும் ஒப்புகொள்ள மறுக்கின்றனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியான டாக்டர் அசால் கான் இதுகுறித்து கூறுகையில், "சில சீன நிறுவனங்கள் கழுதைகளை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டினர். ஆனால், நாங்கள் அதை ஏற்கவில்லை" என்கிறார்.
Pakistan Donkeys: பலவீனமான கழுதைகளையும் சீனா விடுவதில்லை
சீனாவில் இருந்து வருபவர்கள் தங்கள் மருந்துக்கு தேவையான தோலுக்காக பலவீனமான ஆரோக்கியமில்லாமல் இருக்கும் கழுதைகளையும் வாங்கவும் தயாராக இருப்பதாக கழுதை வியாபாரிகள் தகவல் கூறுகின்றனர். ஒருமுறை சீனாவைச் சேர்ந்த குழு ஒன்று 14 ஆரோக்கியமற்ற கழுதைகளை தலா ரூ.40,000 கொடுத்து வாங்கிச் சென்றதாக தெரிவித்தனர்.
Pakistan Donkeys: கழுதை இறைச்சி
கழுதை இறைச்சி பாகிஸ்தானில் ஹராமாக பார்க்கப்படுகிறது. "பாகிஸ்தானில் கழுதைகள் கொல்லப்படுவதில்லை என்பதையும் அவற்றின் இறைச்சி சட்டவிரோதமாக விற்கப்படுவதில்லை என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றும் கராச்சி வர்த்தக சபையைச் சேர்ந்த சலீம் ரேசா தெரிவித்திருந்தார். மேலும், தவறான முறையில் உள்ளூர் சந்தைகளில் இறைச்சிகள் நுழைவதை தடுக்க, தோல் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் தொழிற்சாலைகளை அமைத்து அதனை சரியாக நிர்விகிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
(PTI Inputs)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ