ஜம்மு காஷ்மீர் அருகே உள்ளது பிரபல சுற்றுலா தளமான பகல்காம். இந்தியாவின் சுதர்லாந்து என கூறப்படும் இங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சூட்டு கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிந்து நதி நீரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது. இதனால் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லையில் ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
போர் பதற்றம் நிலவி வரும் காரணத்தால் இரு நாடுகளின் ராணுவ பலம், பாதுகாப்புத் துறையின் பலம் குறித்துதான் அலசப்படும். ஆனால் ஏற்கனவே பாகிஸ்தானின் பொருளாதாரம் குறித்து ஊடகங்கள் அனைத்தும் அலசத் தொடங்கிவிட்டன. ஏனென்றால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே அதலபாதாளத்தில் இருப்பதுதான். ஒருவேளை போர் நடந்தால், இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு இழப்பு அதிகமாக இருக்கும். அதனால் அப்படி நடந்தால், அந்த நாடு அதனை எப்படி சமாளிக்கும் என்ற கேள்விகள் எழும்பி உள்ளன.
தற்போதே அந்த நாட்டின் உணவு பொருட்களின் விலை அதி பயங்கரமாக உள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 340 ஆகவும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ. 800 ஆகவும் உள்ளதாம். அதேபோல் ஒரு டசன் முட்டை ரூ. 332 ஆகவும் அப்பிள் கிலோ ரூ. 288 ஆகவும் ஒரு லிட்டர் பால் ரூ. 224 ஆகவும் வாழைப்பழம் கிலோ ரூ. 176 ஆகவும் தக்காளி கிலோ ரூ. 150 ஆகவும் உருளைக்கிழங்கு கிலோ ரூ. 105 ஆகவும் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
அந்நாட்டில் வறட்சியால் ரூ. 1 கோடி மக்கள் பட்டினிக்கு ஆளாகும் நிலை உள்ளது. இப்படி பொருளாதாரத்தில் இருந்துக்கொண்டு அண்டை நாடான இந்தியாவுடன் போர் தொடுக்குமா? அப்படி போர் தொடுத்தால் அதற்கு நிதி உள்ளதா? போரால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்குமா? உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன.
போர் கூட வேண்டாம், அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சம், மின் தடை போன்றவற்றுக்கு இடையே சிந்து நதியை முழுவதுமாக தடுக்கப்பட்டாலே இரண்டு மாகாணங்கள் கடும் வறட்சியில் மாட்டிக்கொள்ளும். ஏற்கனவே இரு நாடுகளின் எல்லை மூடப்பட்டுவிட்டது. வணிகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் அடிப்படை பொருட்கள் விண்ணைத் தொடலாம். இப்படி பல பிரச்சனைகள் உள்ளன. எனவே அந்நாடு போர் செய்ய வேண்டும் என முடிவெடுத்தால், அதன்பின் நடக்கும் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்.
மேலும் படிங்க: ஐ.நா.வில் மாஸ் காட்டிய இந்திய துணை தூதர்.. பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி!
மேலும் படிங்க: பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோமா? இந்தியாவை கடுமையாக சாடிய அப்ரிடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ