)
Serial Killer Law Student Brazil : பிரேசிலை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், ஐந்து மாதங்களில் 4 பேரை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் இப்படி மாறியது ஏன்? இவர்களை எப்படி கொலை செய்தார்? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பெண் கைது!
பிரேசில் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி, ஆனா பாலா வெலோசோ ஃபெர்னாண்டஸ். இவருக்கு 36 வயது ஆகிறது. இவரை, போலீஸார் சமீபத்தில் தனது இரட்டை சகோதரி மற்றும் வகுப்பு தோழர் மிச்சல் பாவியா டா சில்வா என்கிற 43 வயது நபருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து விஷ பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பொருளாக பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை இந்த பெண், நான்கு பேரை கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதலாவதாக மார்சிலோ ஃபோன்சீகோ என்பவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனா, இவரது இடம் ஒன்றை வாடகைக்கு விடுவதாக அறிவித்த போது இர்து குறித்த சந்தேகங்கள் எழ ஆரம்பித்திருக்கிறது. இன்னொரு நபரை, டேட்டிங் ஆப்பில் பார்த்து, அவருடன் டேட்டிங் சென்று கொன்றிருக்கிறார். பின்னர், தன்னுடன் படித்த 65 வயது நபரை கொன்றிருக்கிறார். கடைசியாக 21 வயது எக்ஸ் காதலரை விஷம் கலந்து கொன்றிருக்கிறார்.
இது குறித்து பேசும் போலீஸார், கைது செய்யப்பட்ட பெண் இப்படி சிலரை கொள்வதில் இன்பம் காணுவதாக கூற்யிருக்கின்றனர். கூடவே, இவர் இந்த 5 மாத காலத்தில் 10 நாய்களையும் விஷம் வைத்து கொன்றிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ