)
Super Typhoon Ragasa: சூப்பர் சூறாவளி (Super Typhoon) உருவெடுதத் ரகாசா சூறாவளி (ragasa typhoon) கடந்த திங்கட்கிழமை முதல் பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அசுரத்தனமான சூறாவளிக் காற்று, தொடர்ச்சியாக பெய்யும் கனமழை ஆகியவற்றால் ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
ரகாசா சூப்பர் சூறாவளியால் ஏற்கெனவே வெள்ள அபாய பகுதியில் வசிப்பவர்கள் தங்களின் குடியிருப்புகளின் முன்புறம் மணல்மூட்டைகளை அடுக்கி, வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை முதல் தைவானில் ரகாசா சூறாவளி கடுமையான மழையை கொடுத்துள்ளனது. கிழக்கு தைவானின் ஹுவாலியன் கவுண்டியில் மட்டும் சுமார் 70 செ.மீ., அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. தைவானில் மட்டும் சுமார் 7,600 பேர் தங்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரகாசா சூறாவளி தெற்கு சீனா மற்றும் ஹாங் காங் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மேலும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தைஷான் மற்றும் ஜான்ஜியாங் இடையே இன்று புதன்கிழமை நண்பகல் அல்லது மாலைக்குள் ரகாசா சூப்பர் சூறாவளி கரையைக் கடக்கும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹுவாலியன் கவுண்டியில் பெய்த கனமழையால் அங்குள்ள Barrier Lake என்ற ஏரி நிரம்பி, ஊருக்கு நீர் புகுந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹுவாலியன் கவுண்டியின் குவாங்ஃபு நகருக்குள் வெள்ளப்பெருக்கை ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 124 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்கிழமை (செப். 23) மதியம் Barrier ஏரி நிரம்பி வழிந்துள்ளது. இதனால் அதை கரைகள் உடைந்து ஏரி நீர் மொத்தமும் குவாங்ஃபு நகருக்குள் பாய்ந்துள்ளது. இதனால், அங்கிருந்த பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன. நகரமே மொத்தமாக சீர்குலைந்துள்ளது. Barrier ஏரி என்பது கடுமையான மழையால் ஏற்பட்ட நிலசரிவால் பல ஆண்டுகளுக்கு முன் உருவானதாகும்.
இன்று காலை நிலவரப்படி, 14 பேர் உயிரிழந்துள்ளனர், 18 பேர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். அருகாமையில் உள்ள பகுதிகளிலும் வெள்ளநீர் உயர்ந்துகொண்டே வந்துள்ளது. சுமார் 2 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பபட்டுள்ளது.
HAPPENING NOW: The current situation in Guangfu Township, Hualien County, Taiwan, is that the barrier lake has collapsed, and the village is filled with elderly residents. pic.twitter.com/47xtah7ryW
— Weather Monitor (@WeatherMonitors) September 23, 2025
இதனால் சுமார் 263 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தண்ணீர் வடியும் வரை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Barrier ஏரி நிரம்பியதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ