மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு காத்திருக்கிறதா? 8வது சம்பள கமிஷன்.. நிதிச் செயலாளர் அளித்த அப்டேட்

8th Pay Commission: சுமார் 5.4 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழு குறித்த தெளிவான செய்திக்காக காத்திரிக்கிறார்கள். இந்த நிலையில், இது தொடர்பான ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 1, 2023, 07:47 PM IST
  • 8th Pay Commission: நிதிச் செயலாளர் கொடுத்த அப்டேட்.
  • சில மாற்றங்கள் வரக்கூடும்.
  • யார் அதிகம் பயனடைவார்கள்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு காத்திருக்கிறதா? 8வது சம்பள கமிஷன்.. நிதிச் செயலாளர் அளித்த அப்டேட் title=

8வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: அடுத்த ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ளன. அதற்கு முன்னதாக அடுத்த ஊதிய கமிஷனை அரசு உருவாக்குமா என்ற கேள்வி மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. சுமார் 5.4 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இது குறித்த தெளிவான செய்திக்காக காத்திரிக்கிறார்கள். இந்த நிலையில், இது தொடர்பான ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது.

8th Pay Commission: நிதிச் செயலாளர் கொடுத்த அப்டேட்

அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத்தேர்தல்களுக்கு முன்னதாக எட்டாவது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு கொண்டு வருவது குறித்து சமீபத்தில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த காலங்களில், தேர்தல்களுக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees), ஆயுதப்படை பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரை மகிழ்விக்கும் வகையில் ஊதியக்குழு அமைப்பதை வெவ்வேறு அரசாங்கங்கள் ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளன. முன்னதாக, மாநில மற்றும் பொதுத் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 2013 இல் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டம்

எனினும், பாஜக அத்தகைய நடவடிக்கையிலிருந்து விலகி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இது மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!

தற்போதைய திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிப்பு செய்கிறார்கள், அதே நேரத்தில் அரசாங்கம் 14 சதவீதத்தை செலுத்துகிறது. இது அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியுள்ளன. இது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக அளிக்கின்றது. மெலும், இதில் ஊழியர்கள் பங்களிக்கவும் தேவை இல்லை. 

இந்த முறையை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. "சம்பந்தப்பட்ட அனைவருடனும் நாங்கள் ஆலோசனைகளை முடித்துள்ளோம், எங்கள் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்" என்று சோமநாதன் கூறியுள்ளார்.

சில மாற்றங்கள் வரக்கூடும் 

8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடகக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. 

யார் அதிகம் பயனடைவார்கள்?

குறைந்த ஊதிய வரம்பில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், அதிக வரம்பில் உள்ளவர்களுக்கு ஊதிய 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய பரீசலனை செய்யப்படக்கூடும் என கூறப்படுகின்றது. ஆனால், இதில் என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. 

மேலும் படிக்க | IMPS New Service: பணம் அனுப்புவது சுலபமானது... 5 லட்சம் வரை அனுப்ப இனி இதை செய்ய வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News