ஊழியர்களை அசரடித்த மாநில அரசு... விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு!

DA Hike: மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாநில அரசு ஒன்று தனது ஊழியர்களுக்கு டிஏ-வை உயர்த்தி அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 9, 2023, 01:06 PM IST
  • விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்பு.
  • டிஏ நான்கு சதவீதம் உயர்வு.
  • இதுபோல் கடந்தாண்டு ஆகஸ்டில் டிஏ உயர்த்தப்பட்டது.
ஊழியர்களை அசரடித்த மாநில அரசு... விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு! title=

7th Pay Commission, DA Hike: நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில், ஊழியர்களின் அகவிலைப்படி விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்னதாக மாநில அரசு தனது ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநில ஊழியர்களுக்கு அந்த நற்செய்தியை வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர அரசு தங்களின் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஊழியர்களின் டிஏ 4 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஆகஸ்டில் அதிகரிப்பு

அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, அரசுக்கு சுமார் 9 கோடி ரூபாய் சுமை ஏற்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முன்னதாக 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியிருந்தது.

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்? ஊழியர்களின் ஊதியத்தில் 44% உயர்வு எப்போது?

விரைவில் மத்திய அரசு

இது தவிர, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு விரைவில் உயர்த்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின்படி, இந்த முறையும் ஊழியர்களின் டிஏவில் 4 சதவீதம் அகவிலைப்படியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

உயரும் டிஏ

தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதேசமயம், அரசு 4 சதவீதம் உயர்த்தினால், ஊழியர்களுக்கு 46 சதவீத டிஏ பலன் கிடைக்கும். செப்டம்பர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறலாம், அதில் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசாங்கம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகையால், மத்திய அரசு, தங்களது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை இம்மாதம் உயர்த்தக்கூடும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் அகவிலைப்படியை இருமுறை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகின்றது. 

ஜுலை முதல் அகவிலைப்படி அதிகரிப்பு பொருந்தும் என்பதால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான அரியர் தொகையும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் சேர்ந்து வரும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, அரியர் தொகை என மொத்தத்தில் ஊழியர்களுக்கு பம்பர் சம்பள உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க | SGB Scheme: தங்கத்தின் விலை மலிவானது, 10 கிராம் விலை இன்று இவ்வளவுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News