சூயஸ் கால்வாயில் நீடிக்கும் டிராபிக் ஜாம்; நெருக்கடியில் உலக வர்த்தகம்

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal)  தினமும் 900 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2021, 10:49 AM IST
  • சூயஸ் கால்வாய் நெருக்கடி நிலை நீடிக்கிறது
  • பிரம்மாண்ட சரக்கு கப்பல் சிக்கியுள்ளதால் 5 வது நாளாக தொடர்ந்து கடலில் டிராபிக் ஜாம்.

    கப்பலை மீண்டும் மிதக்க வைக்க முயற்சி தொடர்கிறது.
சூயஸ் கால்வாயில் நீடிக்கும் டிராபிக் ஜாம்; நெருக்கடியில் உலக வர்த்தகம் title=

மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயல் காலவாயில்,  கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. குறுக்கே தரைதட்டி நிற்கும் எவர் கிரீன் (Ever green) என்னும் பிரம்மாண்டமான  சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க,  மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்கின்றன.

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal)  தினமும் 900 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது.

இந்த கால்வாயில், 5ம் நாளாக நீடிக்கும் ட்ராபிக் ஜாம், உலக வர்த்தகத்தை முடக்கியுள்ளது. இதனால், எண்ணெய் விலைகளும், மற்ற பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாயில், ஐந்து நாட்களாக சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை மீண்டும் மிதக்க வைக்க இரண்டு சக்திவாய்ந்த படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாபெரும் கப்பலை அகற்ற படகுகளுக்கு உதவ டச்சு மற்று இத்தாலியை சேர்ந்த கப்பல் படை வீரர்களுக்கு உதவு வந்துள்ளனர். 

ALSO READ | சூயஸ் கால்வாய் ட்ராபிக் ஜாம் எப்போது அகலும்; அதிகாரிகள் கூறுவது என்ன

சூயஸ் கால்வாயின் குறுக்கே கப்பல் சிக்கிக் கொண்டதற்கு  சூறாவளி புயல் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில்,  வானிலை முக்கியக் காரணமல்ல என்று இப்போது கப்பல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித தவறு காரணமாக நடந்து இருக்கலாம் என்றும் இது கூறித்து முழுமையாக விசாரணை நடத்திய பின் உண்மையான  காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நெருக்கடி எப்போது தீர்க்கப்படும் என கேட்கையில், அது பற்றி இப்போது கூற இயலாது என அதிகாரிகள் கூறுகின்றனர். 

கப்பல் போக்குவரத்து தடைபட்டால், ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் ஆகும். 

ALSO READ | In Pics: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News