சாப்பிட்ட பிறகு இந்த தவறுகளை மட்டும் செய்யவே கூடாது!

உணவு நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியம் என்றாலும், உணவுக்குப் பிறகு நாம் செய்யும் சில தவறுகள் நமது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.   

Written by - RK Spark | Last Updated : May 7, 2024, 08:50 AM IST
  • சாப்பிட்டவுடன் தூங்குவது நல்லது இல்லை.
  • பழங்களை சாப்பிட்டவுடன் எடுத்து கொள்ள கூடாது.
  • கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது.
சாப்பிட்ட பிறகு இந்த தவறுகளை மட்டும் செய்யவே கூடாது!  title=

Post Meal Mistakes: மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது பல வித்தியாச வித்தியாசமான உணவுகளை தேடி போய் சாப்பிடுகின்றோம். இதனால் தினமும் சிறுசிறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கூடுதலாக, எதிர்காலத்தில் பல கடுமையான நோய்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது. எனவே, பாஸ்ட் புட்க்கு முன்னுரிமை கொடுக்காமல் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். 

மேலும் படிக்க | வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்

எந்த ஒரு உணவாக இருந்தாலும் சாப்பிட்ட பிறகு ஜீரணமாவது மிகவும் அவசியமான ஒன்று. இல்லையெனில் பல்வேறு வகையான உடல் நல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். சாப்பிட்ட பிறகு பெரும்பாலானோர் செய்யும் சில தவறுகள் உள்ளன. இதனால் உணவு ஜீரணம் ஆகாமல் அப்படியே தங்கிவிடுகிறது. எனவே சாப்பிட்டவுடன் என்ன என்ன செய்ய வேண்டும் என்ன என்ன செய்ய கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் செய்யும் சிறு தவறினால் எதிர்காலத்தில் நீங்கள் சில கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம்.

- சாப்பிட்ட உடனேயே பெட்டில் நேரடியாக சென்று படுக்க கூடாது என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது அவர்களின் உடலின் ஆற்றலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர உடல் எடையும் அதிகரிக்கலாம்.

- சாப்பிட்ட பிறகு உடனே குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீர் குடிப்பதால் வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் உணவு செரிமானமாகாது, இது வயிற்று வலியை ஏற்படுத்த கூடும்.

- சாப்பிட்ட பிறகு சூடான டீ, காபி குடிக்கக் கூடாது. இதன் காரணமாக உணவு செரிமானம் ஆகாது. மேலும், வாயு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனை தொடர்ந்து செய்தால் எதிர்காலத்தில் கடுமையான வயிறு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படலாம்.

- சாப்பிட்ட பிறகு நன்றாக தண்ணீர் குடிப்பது நல்லது. பெரும்பாலும் இதனை செய்ய மக்கள் மறக்கின்றனர். நீர் செரிமானத்திற்கு உதவுகிறது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. 

- நன்றாக சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது சகஜம் தான். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்குவது நல்லது இல்லை. சாப்பிட்ட உடனேயே தூங்கினால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். சாப்பிட்டவுடன் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருந்து தூங்குவது நல்லது. 

- பழங்கள் சாப்பிடுவது நல்லது தான் என்றாலும் அவற்றை உட்கொள்ளும் போது நேரம் முக்கியமானது. சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது விரைவான செரிமான செயல்முறையை தடுக்கலாம். சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணிநேரம் காத்திருந்து பழங்களை சாப்பிடுவது நல்லது.

- ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்றாலும், சாப்பிட்ட உடனேயே கடுமையான உடல் பயிற்சி அல்லது உடற்செயற்பாடுகளில் ஈடுபடுவது நல்லது இல்லை. இது அஜீரணம் அல்லது வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சாப்பிட்டவுடன் மந்தமாக இருந்தால் லேசான நடைப்பயிற்சி செய்வது நல்லது.

மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News