குரு பெயர்ச்சி: 2023 வரை இந்த 3 ராசிக்கு கூரையை பிய்த்து அதிர்ஷ்டம் கொட்டும்

ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது, ஏனெனில் இந்த கிரகம் ஒரு நல்ல நிலையில் இருந்தால், அந்த நபரின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுப்பார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2022, 01:34 PM IST
  • குடும்பத்தில் சமய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
  • படிப்பதில் ஆர்வம் இருக்கும்.
குரு பெயர்ச்சி: 2023 வரை இந்த 3 ராசிக்கு கூரையை பிய்த்து அதிர்ஷ்டம் கொட்டும் title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருவின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகவும் முக்கியமானது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் தனது ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். குரு பகவானின் பார்வை கடகம், கன்னி, விருச்சிக ராசிகளின் மீது விழுகிறது. இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளைத் தரும். 

பொதுவாக குரு பிருஹஸ்பதி அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப்பணி, புனித இடம், ல்வம், தொண்டு, நல்லொழுக்கம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த குரு பகவான் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2023 இல் ராசியை மாற்றுவார். அத்தகைய சூழ்னிலையில் தற்போது இந்த ஆண்டு முழுவதும், 3 ராசிக்காரர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வதோடு, மிகுந்த மகிழ்ச்சியையும் பொழிவார் குரு பகவான். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு நல்ல பலன் தரும் என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

ரிஷபம்: மீன ராசியில் வியாழன் நுழையும் போதே ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கியுள்ளன. வரும் 1 வருடத்திற்கு வியாழன் கிரகம் இவர்களுக்கு பல நன்மைகளை தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பெரிய கனவு நிறைவேறும். வருமானத்தில் வலுவான அதிகரிப்பு இருக்கும், இது உங்கள் நிதி சிக்கல்களை சமநிலை செய்யும். சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் கைகூடும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில்-வியாபாரத்தில் மிகவும் நல்ல பலன்களைத் தரும். அவர்கள் பதவி உயர்வு பெறலாம். சம்பளம் கூடும். வியாபாரிகளின் வலைப்பின்னல் வலுப்பெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குறிப்பாக மீடியா மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் பெரிய பலன்களைப் பெறுவார்கள்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைக் கொண்டுவரும். பயணங்கள் இருக்கும், அதில் நிறைய வெற்றிகள் இருக்கும். வியாபாரிகளுக்கும் வியாழன் பல நன்மைகளைத் தருவார். தொழில் வளர்ச்சி எளிதாக இருக்கும். மாறாக, வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்குகள் நிறைவேறும். எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News