பண்டிகையை கவலையின்றி கொண்டாட... ஊழியர்களுக்கு 2 மாநில அரசுகள் கொடுக்கும் பரிசு!

7th Pay Commission: அடுத்தடுத்து பண்டிகை வருவதையொட்டி, இரண்டு மாநில அரசுகள், அதன் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 17, 2023, 05:35 PM IST
  • ஓணம், விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளது.
  • கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
  • இதுதொடர்பாக நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பண்டிகையை கவலையின்றி கொண்டாட... ஊழியர்களுக்கு 2 மாநில அரசுகள் கொடுக்கும் பரிசு! title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி  வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை இரண்டு மாநில அரசுகள் வழங்கியுள்ளன. அரசு ஊழியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சில ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்பணமாக வழங்க முடிவெடுத்து உள்ளதாகவும் என மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இதனுடன், ஓய்வூதியதாரர்களுக்கும் முன்கூட்டியே ஓய்வூதியம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், இம்முறை சம்பளத்தை முதலிலேயே வெளியிட மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த முறை ஊழியர்கள் தங்கள் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடலாம், அதனால்தான் பண்டிகைக்கு முன்னதாக சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தை முன்கூட்டியே மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனுடன், அதைப் பற்றி தயார் செய்ய உங்கள் உள்ளூர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும். இதுதவிர ஓணம் பண்டிகையின் போது ரூ. 4 ஆயிரம் முன்பணம் வழங்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு விரைவில்.. டிஏ ஹைக் எவ்வளவு தெரியுமா?

பண்டிகையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் விநாயக சதுர்த்தியும், கேரளாவில் ஓணம் பண்டிகையும் அதிக மக்களால் கொண்டாடப்படுகின்றன. மகாராஷ்டிரா ஊழியர்களின் கணக்கில் செப். 27ஆம் தேதி அன்று மட்டுமே பணம் மாற்றப்படும். இது தவிர, ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கேரளா ஊழியர்களுக்கு பணம் மாற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கேரளாவின் அனைத்து மத்திய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் PAO மூலம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்திற்கான அதிகரிப்பு 3 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 45 சதவீதத்தை எட்டும்.

ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்ப அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்க அளவுகள் CPI-IW மூலம் எதிரொலிக்கிறது. விலைவாசி மற்றும் பணவீக்கத்தை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஜாக்பாட்! ஊழியர்களுக்கு அசத்தல் பரிசு: ஆகஸ்ட் 25க்குள் சம்பளம், போனஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News