மத்திய அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான நற்செய்தி: 50% டிஏ, எக்கச்சக்க ஊதிய உயர்வு

8th Pay Commission: சமீபத்தில் ஏற்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு காரணமாக விரைவில் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல், அடுத்த ஊதியக்குழு, அதாவது 8வது சம்பள கமிஷன் வந்தால் ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் ஏற்படும்.

8வது ஊதியக்குழு பற்றி சமீப காலங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. சிலர் இது விரைவில் வரும் என்றும் சிலரோ இது இப்போது வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் கூறி வருகிறார்கள். 8வது ஊதியக்குழு வரவுள்ளதா? அடுத்த ஊதியக்குழு வந்தால் ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இந்த அப்டேட் தொடர்பான முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

1 /8

நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாராவது மத்திய அரசு பணிகளில் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

2 /8

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் தொடர்பாக ஊதியக் குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3 /8

8வது ஊதியக் குழு (8th Pay commission) குறித்து இப்போது விவாதிப்பது சரியல்ல என்று அரசாங்க அதிகாரிகள் கூறி வருகிறார்கள். அதன் உருவாக்கம் குறித்து 2024 தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படலாம். 8வது சம்பள கமிஷன் வந்தால், அதன் உருவாக்கம் 2024 இறுதிக்குள் நடக்கும், மேலும் அது 2026க்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

4 /8

எனினும், அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். இதற்கான காரணம் அகவிலைபடியுடன் (Dearness Allowance) தொடர்புடையது.   

5 /8

ஏழாவது ஊதியக்குழு (7th Pay Commission) விதிகளின் படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, ​​அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதற்குப் பிறகு, அப்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத டிஏ சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். ஜூலை 2023-க்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு, மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

6 /8

ஜனவரி 2023 -இலும் அகவிலைபப்டி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும். ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமானால், புதிய ஊதிய குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். 

7 /8

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களும் வரவுள்ள நிலையில், அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

8 /8

ஊடக அறிக்கையின்படி, 8வது ஊதியக் குழுவில் ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் மதிப்பாய்வு செய்யப்படலாம். தற்போது, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள திருத்தம் செய்யப்படுகிறது, இது நீண்ட காலமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் அதை மாற்றுவது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது. குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் சம்பள உயர்வு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்படலாம்.