சென்னை : கேமராவுக்கே டிமிக்கி கொடுத்து கொள்ளையடித்த பலே திருடர்கள்! துணிகர கொள்ளை லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த திருடர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க சமயோசித்தமாக சிந்தித்துள்ள கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2024, 02:37 PM IST
  • சென்னை மாதவரத்தில் துணிகர கொள்ளை
  • சிசிடிவி கேமராவில் சிக்காத திருடர்கள்
  • மாதவரம் காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை
சென்னை : கேமராவுக்கே டிமிக்கி கொடுத்து கொள்ளையடித்த பலே திருடர்கள்! துணிகர கொள்ளை லேட்டஸ்ட் அப்டேட் title=

சென்னை மாதவரம் மெஜஸ்டிக் காலனியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இவர் குடும்பத்துடன் சென்றிருந்தார். வீட்டினை கண்காணிக்க அவரது வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளதால் எந்த பயமும் இல்லாமல் உறவினர் வீட்டில் இருந்துள்ளார். மேலும், அந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் தனது செல்போனில் நேரலையாக தெரியும்படியும் வைத்துள்ளார். சிசிடிவி கேமராவை அவ்வப்போது பார்த்து வந்த உதயகுமாருக்கு, திடீரென இரு கேமராக்கள் திசை மாறி திருப்பி வைக்கப்பட்டது தெரிந்திருக்கிறது. அதாவது கேமரா வேறு கோணத்தில் இருந்ததை ஆன்லைனிலேயே பார்த்துள்ளார். 

மேலும் படிக்க | பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது - முகஸ்டாலின்!

இதில் சந்தேகம் அடைந்த உதயக்குமார் உடனடியாக, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார். அதில்  வீட்டின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் திருப்பி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து இது குறித்து தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது குடும்ப நண்பரிடம் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்கள் திருப்பப்பட்டு இருக்கும் சம்பவம் குறித்தும், தனது வீட்டினை ஆய்வு செய்து அது குறித்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் உதயகுமாரின் வீட்டினை ஆய்வு செய்த போது கண்காணிப்பு கேமராக்கள் திருப்பப்பட்டு, வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து சென்னை மாதவரம் குற்றப்பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார் .

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதயகுமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடுபோன நகை, பணம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உதயகுமார் வீட்டிலிருந்து எவ்வளவு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்கின்ற விவரம் உதயகுமார் ஊரில் இருந்து வந்த பிறகு தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விபட்ட உதயகுமார் பெங்களூர் உறவினர் வீட்டில் இருந்து அவசர அவசரமாக கிளம்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News