NSC: வட்டியில் மட்டும் 4 லட்சத்துக்கு மேல் வருமானம், அள்ளிக்கொடுக்கும் அசத்தல் திட்டம்

';

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள்

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கான பொது மக்களின் பிரபலமான விருப்பமாக உள்ளன.

';

தேசிய சேமிப்பு சான்றிதழ்

ஏப்ரல் 1, 2023 முதல், தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) அதாவது NSC உட்பட, தபால் அலுவலகத்தின் (Post Office) பல சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

';

முதலீட்டாளர்கள்

இப்போது NSC -இல் முதலீட்டாளர்களுக்கு 7.7% வட்டி விகிதம் கிடைக்கிறது. NSC, தபால் அலுவலகத்தின் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

';

தபால் அலுவலகம்

எந்தவொரு தபால் அலுவலக கிளைக்கும் சென்று இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். NSC திட்டத்தில் முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் காம்பவுண்டிங் இண்ட்ரஸ்ட் அதாவது கூட்டு வட்டியின் பலனைப் பெறலாம்.

';

வட்டி விகிதம்

NSC -இல் NSC VIII, அதாவது எட்டாவது வெளியீடு 5 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது. இந்த திட்டத்திற்கு 7.7% வருடாந்திர வட்டி (Interest Rate) கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் வட்டித் தொகையுடன் சேர்த்து அசல் தொகையையும் பெறுவார்கள்.

';

வருமான வரி

முதல் நான்கு ஆண்டுகளில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ஆரம்ப முதலீடு மற்றும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். இதில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் விலக்கு கிடைக்கும்.

';

NSC

NSC இல் உங்கள் முதலீடு முதிர்ச்சியடையும் போது, அதாவது மெச்யூரிட்டியின் போது, நீங்கள் அதை ரொக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

';

வங்கிக் கணக்கு

இந்தத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியையும் தேர்வு செய்யலாம்.

';

என்எஸ்சி கணக்கு

இந்தப் பணத்தை வித்ட்ரா செய்யாமல், அதை என்எஸ்சி கணக்கிலேயே (NSC Account) இருக்க விட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தில் அந்த தொகைக்கு வட்டி கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story