EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்; விதிகளில் மாற்றம், இனி அதிக நன்மை

';

இபிஎஃப்ஓ

EPFO சில குறிப்பிட்ட அவசரகாலங்களில் PF உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் கீழ், விண்ணப்பித்து 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்.

';

EPFO Auto Mode Settlement

ஆட்டோ-மோட் செட்டில்மென்ட்டின் (EPFO Auto Mode Settlement) கீழ், அவசரகாலத்தில் ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்கலாம்.

';

EPFO சந்தாதாரர்கள்

EPFO சந்தாதாரர்கள் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் பிஎஃப் நிதியிலிருந்து ஆட்டோ க்ளெய்ம் முறையில் பணத்தை எடுக்கலாம்.

';

தானியங்கி செயல்முறை

அவசரகாலத்தில் நிதியை க்ளைம் செட்டில் செய்வதற்கான தானியங்கி செயல்முறை அதாவது ஆட்டோ மோட் (Auto Mode) ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது உடல்நல பிரச்சனை, அதாவது நோய்களுக்கான சிகிச்சையின் போது மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

';

ஆட்டோ மோட் செடில்மெண்ட்

இப்போது இதன் கீழ் வரும் வசதிகள் அதிகரித்துள்ளன. நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான நிதி உதவி என இவை அனைத்துக்கும் இப்போது ஆட்டோ மோட் செடில்மெண்டை பயன்படுத்தலாம்.

';

பணம் எடுப்பதற்கான வரம்பு என்ன?

EPF கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது, தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

';

முன்பணம்

பிஎஃப் உறுப்பினர்களுக்கு முன்பணம் அளிப்பதற்கான செயல்முறை ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் கணினி மூலம் செய்யப்படும். இதற்கு யாரிடமும் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்களின் கணக்கில் பணம் வந்து சேரும்.

';

பிஎஃப் உறுப்பினர்கள்

இதற்கு பிஎஃப் உறுப்பினர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் KYC, க்ளைம் செய்வதற்கான தகுதி, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை அடங்கும்.

';

VIEW ALL

Read Next Story