மாரடைப்பு வராமல் தடுக்க... உதவும் ஆயுர்வேத பானங்கள்!

';

மாரடைப்பு

சில ஆயுர்வேத பானங்களை தொடர்ந்து அருந்தி வந்தால், ரத்த ஓட்டம் மேம்படுவதோடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது.

';

மஞ்சள் பால்

குர்குமின் நிறைந்த மஞ்சள், பாலுடன் சேர்ந்தால், இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். இதய நோய்கள் மட்டுமல்ல, நுரையீரலும் வலுப்படும்.

';

இஞ்சி டீ

இஞ்சியை துருவி, தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க விட்டு, வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

இலவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டையை பொடி செய்து அதில் சிறிது மஞ்சளும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்துவது இதய நோய்களை தடுக்கும்

';

பீட்ரூட் ஜூஸ்

ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பீட்ரூட், அடைப்புகளை நீக்கி, ரத்த நாளங்களை விரிவு படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது.

';

நெல்லிக்காய் ஜூஸ்

ஆயுர்வேத மூலிகையான நெல்லிக்காய், இதய நோய்கள் அண்டாமல் தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

துளசி டீ

இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்த நீரை வடிகட்டி அருந்துவதால், இதய நோய்கள் அண்டாது,

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story