பாமாயிலை ஏன் பயன்படுத்தக்கூடாது? உடலாரோக்கியத்தை சீர்குலைக்கும் பனை மரத்தின் எண்ணெய்!

';

பாமாயில்

கடந்த சில தசாப்தங்களாக பாமாயிலின் நுகர்வு மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது, ஆனால், இது ஆரோக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பல தீங்குகளை ஏற்படுத்துகிறது

';

உணவு எண்ணெய்

பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாமாயில் ஆகும்

';

பாமாயில்

உணவில் இருந்து அழகுசாதனப் பொருட்கள் வரை அனைத்திலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது, அதன் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.

';

கொழுப்பு

பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது, இது இரத்த ஓட்டத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அதிக எல்டிஎல் இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துவதால் தான், பாமாயிலை பயன்படுத்துவதற்கு தடை சொல்லப்படுகிறது

';

காடு அழிப்பு

வாழ்விட அழிவு, காடழிப்புமற்றும் வெப்பமண்டல பகுதிகளில் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றுக்கும் பாமாயில் உற்பத்திக்கும் தொடர்பு உண்டு. சுற்றுச்சூழல் சீரழிவு காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பதால் பாமாயில் தயாரிப்புக்கு கண்டனங்கள் அதிகரிக்கின்றன

';

கல்லீரல்

பாமாயில் மீண்டும் மீண்டும் சூடேற்றப்படும்போது கல்லீரல் திசுக்களின் சேதத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரலில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட சமையல் எண்ணெய்களின் விளைவுகள் மிகவும் மோசமானவை

';

இரத்தம் உறைதல்

பாமாயில் இரத்தம் உறைவதை மெதுவாக்கும். இரத்த உறைதலை மெதுவாக்கும் மருந்துகளை உண்பவர்கள், பாமாயிலை பயன்படுத்தவேக்கூடாது

';

பழங்குடியினர்

பனை எண்ணெய் உற்பத்தியால், பல உள்ளூர் பழங்குடியினர் தங்கள் மூதாதையர் நிலங்களில் இருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பாமாயில் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் மட்டுமல்ல, சமூக மற்றும் கலாசார தாக்கத்தையும் எதிர்மறையாக ஏற்படுத்துகிறது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story