உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. ஆனால், உப்பு மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும்.

Vidya Gopalakrishnan
Apr 30,2023
';


அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை அறிந்திருக்கும் பலருக்கு சத்தமில்லாமல் உயிரை கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.

';


உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும்

';


அதிக உப்பை உட்கொள்வதால், சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீரக பிரச்சனைகள் உண்டாகிறது.

';


உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உறிஞ்சி விடும்.

';


அதிக உப்பினால், எலும்புகள் வலுவிழந்து, மூட்டு வலி, ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

';


உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக உட்கொள்வது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது.

';


அதிக உப்பு உடல் கொழுப்பை அதிகரிக்கிறது. உப்பு அதிகமாக உட்கொள்வதால் இரைப்பைக் கட்டிகளும் ஏற்படலாம்.

';


ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது. தினமும் 5 கிராமுக்கு மேல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது.

';


ஊறுகாய், வத்தல் போன்ற அதிக உப்பு உள்ள பண்டங்களை குறைத்து குறைவான உப்பை சேர்த்து கொள்வதை பழக்கிக் கொள்ள வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story