மூல நோயா... ‘இந்த’ உணவுகளை தொடவே தொடாதீங்க!

';

மூல நோய்

ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் மூல நோய் ஏற்படுகிறது.

';

கார உணவுகள்

மூல நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கார உணவுகள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக மிளகாய் அதிக வலி மற்றும் எரியும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

';

உப்பு

உப்பு அதிகமுள்ள உணவுகளும் மூல நோயுள்ளவர்களுக்கு எதிரி தான். நீர்க்கோர்வையை உண்டாக்கி மலம் கழிக்கும்போது அதிக அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

';

பால் பொருட்கள்

பால் பொருட்களை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். இவை இரண்டுமே மூல நோய் பிரச்சனையை அதிகரிக்கும்.

';

மைதா

மைதாவில் நார்ச்சத்துக்கள் முற்றிலும் நீக்கப்பட்டு வெறும் பசையம் நிறைந்த கார்போஹைட்ரேட் மட்டும் இருக்கிறது. இது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

';

சிவப்பு இறைச்சி

மூல நோயுள்ளவர்கள் சிவப்பு இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது. ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதோடு, அதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

';

கருமிளகு

கருமிளகு இயற்கையில் உடலுக்கு சூட்டை கொடுக்கும் மசாலா. மூல நோய் இருப்பவர்களுக்கு இதனால் மூல நோய் தீவிரமாகும்.

';

காபி

காபி, டீ போன்ற காஃபைன் கலந்த பானங்களும் மலத்தை இறுக்கமடையச் செய்து மலம் கழிக்கும் போது கடுமையான வலியை உண்டாக்கும்.

';

இஞ்சி

மூல நோயால் அவதிப்படுபவர்கள் இஞ்சியை உட்கொள்வதால், மலத்துடன் இரத்தம் வர வாய்ப்புள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story