சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, அந்த பகுதியில் முதலில் தடம் பதித்த முதல் நாடு இந்தியாவாகும். உலகிலேயே ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் மட்டுமே இதுவரை செயற்கைக்கோளை அனுப்பி சாதித்து உள்ளன. இதில் 4 வது நாடாக இணைந்து இருக்கிறது வளரும் நாடான இந்தியா.

';


விக்ரம் லேண்டரை 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்திருக்கிறது. இதனை இஸ்ரோ டிவிட்டரில் வெளியிட்டது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து இதனை இஸ்ரோ டெலிட் செய்திருக்கிறது. இருப்பினும் இஸ்ரோவின் பதிவு ஸ்கிரீன் ஷாட்களாக டிரெண்டாகி வருகின்றன.

';


நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ISRO அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி தரையிறங்கிய நிலையில் 4 ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் விக்ரம் லாண்டரை துல்லியமாக போட்டோ எடுத்திருக்கிறது.

';


ஆகஸ்ட் 24 அன்று, இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய தகவலில் சந்திரயான் -3 இன் அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி இருப்பதாகவும், அனைத்து அமைப்புகளும் இயல்பானவை என்றும் கூறியது.

';


சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் உயர்-தெளிவு கேமரா (OHRC) சந்திரயான்-3 இன் இந்த படங்களை ஆகஸ்ட் 23, 2023 அன்று விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தடம் பதித்த பிறகு எடுத்தது.

';


சந்திரயான்-3 சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்ட சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, சந்திரனின் தூசிகள் அனைத்தும் படிந்த பிறகு, பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது.

';


சந்திரயான்-3 சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்ட சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, சந்திரனின் தூசிகள் அனைத்தும் படிந்த பிறகு, பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது.

';


விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் 14 பூமி நாட்களுக்கு நிலவில் பல சோதனைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story