தேர்தல் மை குறித்த 14 சுவாரஸ்ய தகவல்

';


தேர்தலின்போது வாக்காளர்ளுக்கு கை விரல்களில் விரைவில் அழியா மை (indelible ink) வைக்கப்படும். கள்ள ஓட்டு போடுவது, ஏமாற்றுவது போன்ற தவறுகள் தவிர்க்க வைக்கப்படுகிறது.

';


2024 மக்களவைத் தேர்தலுக்கு அரசு தயாராகி வரும் நிலையில், அழியாத மை தயாரிக்கும் பணி 70% முடிந்துள்ளதாக மைசூரு நிறுவனம் தெரிவித்துள்ளது.

';


சுருக்கமாக எம்பிவிஎல் என அறியப்படும் `மைசூரு பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்’ நிறுவனம் தேர்தலுக்கான மை தயாரிக்கும் ஆர்டர்களை வாங்கியுள்ளது.

';


கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனம், 1962-ம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்துக்கான மையைத் தயாரித்து வருகிறது.

';


தேர்தல் மை தயாரிப்பு குறித்து பேசியுள்ள நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கே. முகமது இர்பான், ``தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணி 70% முடிந்துவிட்டது. மீதமுள்ளவை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.

';


2024 பொதுத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்ற ஆர்டர்தான் இதுவரை கிடைத்த மிகப்பெரிய ஆர்டர். வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு மை நிரம்பிய குப்பிகளை டெலிவரி செய்துவிட்டோம்.

';


தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு மை தயாரித்து வருகிறோம். வரவிருக்கும் தேர்தலுக்காகப் பல்வேறு மாநிலங்களுக்கு 26 லட்சம் குப்பிகளில் அழியாத மை வழங்கியுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

';


கள்ள ஓட்டு போடுவதைத் தவிர்க்க அழியாத மையை டெல்லியில் உள்ள தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய இயற்பியல் ஆய்வகம் உருவாக்கியது. இதில் சில்வர் நைட்ரேட் உள்ளது. நகம் மற்றும் ஒளிக்கு வெளிப்படும்போது எதிர்வினையாற்றி கருமையாக மை மாறுகிறது.

';


இந்த மையில் ஆல்கஹால் போன்ற ஒரு கரைப்பான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கையில் பட்டவுடன் விரைவிலேயே உலர்ந்துவிடுகிறது. மை வைக்கப்படும் இடத்தில் ஊதா நிற அடையாளம் ஏற்படுகிறது. மூன்று நாள்களுக்கும் மேலாக மை கையில் இருக்கும்.

';


10 மில்லி மை குப்பியில் இருந்து சுமார் 700 பேரின் விரல்களில் மை வைக்கலாம்.

';


வாக்களித்ததுக்கு ஆதாரமாக ஒருவரின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். அவருக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லையென்றால், இடது கையில் உள்ள மற்ற ஏதேனும் ஒரு விரலில் மை வைக்கப்படும்.

';


இடது கையில் அனைத்து விரல்களும் இல்லையென்றால் வலது கையின் ஆள்காட்டி விரலிலோ, வேறு ஏதேனும் விரலிலோ மை வைக்கப்படும்.

';


ஒரு வேளை இரண்டு கைகளின் விரல்களும் இல்லாமல் இருந்தால் தோளின் இடது அல்லது வலது பக்கத்தில் மை வைக்கப்படும் என்று தேர்தல் விதிமுறைகள் கூறுகின்றன.

';


தேர்தல் சமயத்தைத் தாண்டி, கோவிட் தொற்று சமயத்தில் இந்த மை பயன்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அடையாளம் காண சில மாநிலங்களில் மையைப் பயன்படுத்தினர்.

';

VIEW ALL

Read Next Story