இந்திய ரயில்வேயின் IRCTC சுற்றுலா பிரிவு பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐஆர்சிடிசி தென்மண்டலம் திருநெல்வேலியில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் படுத்தியுள்ளது.
பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலில் 11 ஸ்லீப்பர் பெட்டிகள் உட்பட 14 பெட்டிகள் உள்ளன.
நெல்லையிலிருந்து கிளம்பும் இந்த சுற்றுலா ரயில் மதுரை திருச்சி சென்னை வழியாக காசி செல்லும்.
காசியில் இருந்து திருவேணி சங்கம், அயோத்தியா, கயா போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.
மொத்தம் ஒன்பது நாட்களுக்கான இந்த சுற்றுப்பயணம், ஜூன் மாதம் 6ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் ஒரு நபருக்கான கட்டணம் ரூபாய் 18 ஆயிரத்து 550. மேலும் தகவல்களுக்கு ஐ ஆர் சி டி சி இணைய தளத்திற்கு சென்று பார்வையிடவும்.