ஆடிப்பெருக்கு விழா 2024: இப்படி தான் கொண்டாடுனும்

';

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர்.

';

விவசாயிகள் விதை விதைப்பார்கள்

ஆடி மாதம் மழை காலத்தின் துவக்க மாதம் என்பதால் நீர்பிடி இடங்களில் பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர் பெருகி வரும். இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி, நல்ல விளைச்சல் காணலாம் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் விதை விதைப்பார்கள்.

';

ஆடிப்பெருக்கு வழிப்பாடு

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். சிலர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர்.

';

ஆற்றங்கரையில் பூஜை

பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் பூஜை செய்ய பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

';

விநாயகர் வழிப்பாடு

வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.

';

மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்

ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்று நமப்பிக்காய்.

';

கலவை சாதம்

வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

';

VIEW ALL

Read Next Story