அடியார்க்கு உபதேசம் அருளிய ‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்’ உபதேசித்த திருத்தலங்கள்!

Malathi Tamilselvan
Mar 21,2024
';

உபதேசம்

ஆதியும் அந்தமுமான சிவபெருமான் தன் அடியார்க்கும் அடியாராக திகழ்பவர். பக்தர்கள் வாழ்வில் வளம் பெற உபதேசங்கள் அருள்பவர்...

';

சிவதலங்கள்

சிவபெருமான் உலகிற்கு உபதேசித்த உபதேசங்கள் எங்கு நடந்ததோ, அந்த இடங்களில் அமையப் பெற்றிருக்கும் ஆலயங்களுக்கு சென்று தரிசிப்பது வாழ்வில் வளம் பெறச் செய்யும்

';

திருவானைக்கா

ஐயன் சிவனிடம் இருந்து அம்பிகை ஞானோபதேசம் பெற்ற திருத்தலம், இங்கு சிவனின் பெயர் ஜம்புகேஸ்வரர் அன்னையின் பெயர் அகிலாண்ட நாயகி. இது பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமாகும்

';

உத்திரகோசமங்கை

உமையன்னைக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருத்தலம் அமைந்திருக்கும் ஊர்

';

ஓமாம்புலியூர்

ஸ்ரீதட்சிணா மூர்த்தி ரூபத்தில், ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உமாதேவிக்கு, பிரணவப் பொருளை சிவன் உபதேசித்தார்

';

ஆலங்குடி

ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டு சுந்தரர் என்ற நாயன்மார் பஞ்சாட்சர உபதேசம் பெற்ற தலம் திருவாலங்குடி ஆகும்

';

சிதம்பரம்

பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசமாக பெற்ற திருத்தலம் சிதம்பரம் ஆகும்

';

சுவாமிமலை

பிறருக்கு சிவன் உபதேசம் செய்தால், அப்பனுக்கே பாடம் கற்றுக் கொடுத்த பிள்ளையை பெற்ற சிவபெருமான் உபதேசம் பெற்ற திருத்தலம் சுவாமிமலை ஆகும்

';

பொறுப்புத் துறப்பு

பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story