விஷ்ணுவின் பெரிய திருவடி கருடாழ்வாரை எந்த நாளில் வணங்கினால் வைகுண்டம் நிச்சயம்?

';

கருடாழ்வார்

பக்தர்கள் அழைத்தால் திருமால் எந்த நொடியும் செல்லலாம் என்பதால் கருடன் வாகனமாக எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்

';

பெரிய திருவடி

விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். பெருமாள் கோவிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.

';

மகாவிஷ்ணு

பல்வேறு விதமான வாகனங்களில் மகாவிஷ்ணு அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளுவது சிறப்பானது என்பதும் கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார் என்பதும் கருடனுக்கு வைணவ சம்பிரதாயம் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள போதுமானது

';

மங்களமானவர்

வானத்தில் கருடன் வட்டமிடுவதும், சப்தமிடுவதும் சுபமானதாக கருதப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது

';

வழிபாடு

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...

';

ஞாயிறு

கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்வதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

';

திங்கள்

கருடனை திங்கட்கிழமைகளில் தரிசித்தால் துன்பங்களும், துயரங்களும் விலகி இன்பமான மற்றும் சுகமான வாழ்க்கை அமையும்.

';

செவ்வாய்

கருடனை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்தால் துணிச்சலும் தைரியமும் உண்டாகும்

';

புதன்

கருடனை புதன்கிழமைகளில் தரிசித்தால் பகை நீங்கும், செய்யும் செயலில் வெற்றி உண்டாகும்.

';

வியாழன்

கருடனை வியாழக்கிழமைகளில் தரிசித்தால் நீண்ட ஆயுளும், செல்வங்களும் கிடைக்கும்.

';

லட்சுமி கடாட்சம்

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் அன்னை மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்

';

VIEW ALL

Read Next Story