7 வயதில் தொடங்கிய கிரிக்கெட் - அம்பத்தி ராயுடுவின் மறுபக்கம்!

';

குண்டூரைச் சேர்ந்த ராயுடு முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் விஜய் பால் வழிகாட்டுதலின் கீழ், 7 வயதில் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

';

சிறப்பாக விளையாட தொடங்கிய ராயுடு 16 வயதில் ஹைதராபாத் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினார்.

';

2002 ஆகஸ்டில், ஒருநாள் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை அவர் விளையாடினார். இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக 300+ ரன்களைத் சேஸிங் செய்யும்போது 177 ரன்கள் எடுத்தார்.

';

2004 U19 WC -ல் இந்திய அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார். அந்த அணியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், உத்தாபா, ஆர்.பி. சிங் போன்ற வீரர்கள் இருந்தனர்.

';

இந்தியா அரையிறுதியில் தோற்றது. அவர் 2002-03 சீசனில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரில் அவர் 70 சராசரியுடன் 698 ரன்கள் எடுத்தார்.

';

அதன்பிறகு இவருடன் விளையாடிய மற்ற வீரர்கள் போல் ராயுடு கிரிக்கெட் பயணம் சிறப்பாக அமையவில்லை. அவர் ஐசிஎல் தொடரில் விளையாடியதால் சில காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது

';

அதன்பிறகே ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவரது முதல் ஐபிஎல் சீசன் அவரது திருப்புமுனையாக இருந்தது.

';

அந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அம்பதி ராயுடு மற்றும் சவுரப் திவாரி ஆகியோர் தொடர்ந்து ரன்களை குவித்தனர். ஐபிஎல் 2010ல் ராயுடு 140+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன்கள் அடித்தார்.

';

ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் மற்றும் ஆந்திரா அணிகளுக்காக விளையாடிய ராயுடு பரோடா அணிக்கு விளையாட சென்றார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் பரோடா அந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு சென்றது.

';

கிரிக்கெட்டில் சிறபான திறமை கொண்ட பிளேயராக இருந்தும் இந்திய அணிக்காக போதுமான சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

';

2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாததால், அப்போது முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அவரின் கனவு தகர்ந்தது

';

VIEW ALL

Read Next Story