தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோர் அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மெட்டா, எக்ஸ், யூடியூப், கூகுள் மற்றும் பல மீடியா ஹவுஸ் மற்றும் வெப் போர்டல்களுக்கு எதிராகவும் அவர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எம்.எஸ்.தோனி. தொழில் கூட்டாளிகளான ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோருடன் இணைந்து தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி தோனியின் பெயரில் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.
இந்த விஷயத்தில், சில விதிமுறைகளை மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகிய இருவரும் பின்பற்றவில்லை
2017 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருப்பதாக கூறி திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்து வருகிறது
தற்போது, திவாகர் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், இதனால் தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை