பாபர் அசாம் இதை ஏன் செஞ்சீங்க? கொதித்தெழுந்த வாசிம் அக்ரம்

';

ஒருநாள் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

';

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 36 ரன்களுக்குள் இழந்தது.

';

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தினர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 8வது முறையாக தோல்வியடைந்தது.

';

இதனையடுத்து உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

';

இந்தப் போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் அவர் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக பெற்றுக் கொண்டார்.

';

அகமதாபாத் மைதானத்திலேயே விராட் கோலியின் 2 ஜெர்சிக்களில் பாபர் அசாம் கையெழுத்து பெற்றது பாகிஸ்தான் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.

';

இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், விராட் கோலியிடம் இருந்து 2 ஜெர்சியை பாபர் அசாம் வாங்கும் வீடியோவை பார்க்க முடிகிறது...

';

... ஆனால் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, இப்படி வெளிப்படையாக செய்திருக்க கூடாது.

';

திறந்தவெளி மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது என்றே சொல்லுவேன். அதற்கான நாள் இது இல்லை.

';

உங்களின் மாமா மகன் அல்லது உறவுக்கார பையன் கோலியின் ஜெர்சியை கேட்டிருந்தால், ஓய்வறையில் சென்று தனியாக வாங்கி இருக்கலாம்.

';

ஆனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன், கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பாக பார்க்கும் போது இப்படி செய்ய கூடாது என்று ஆவேசப்பட்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story