ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது எப்படி?

';

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.

';

2018 ஆம் ஆண்டு நடந்த இந்த போராட்டத்தின்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

';

அந்த ஆண்டு மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் போராடிய மக்களால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.

';

இதனையொட்டி மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

';

அப்போது, போராட்டம் திடீரென வன்முறையாக மாற, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது

';

இந்த துப்பாக்கிச்சூட்டில் சுமார் 13 பேர் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்.

';

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

';

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அந்த ஆலையை மூடியது சரியே என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

';

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாதிட்டது.

';

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. முதலமைச்சர் முக ஸ்டாலின் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story