உணவு தானியங்கள் & சர்க்கரை பேக்கேஜிங்கில் சணல் பைகள்

';

சணல் பேக்கேஜிங்

ஜேபிஎம் சட்டம், 1987ன் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான சணல் பேக்கேஜிங் மெட்டீரியலுக்கான முன்பதிவு விதிமுறைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

';

சணல் தொழில்

ஆலைகள் மற்றும் துணைப் பிரிவுகளில் பணிபுரியும் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு இது. சுமார் 40 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு ஆதரவையும் வழங்கும்.

';

சணல்

ஜூலை 1 முதல் ஜூன் 30 வரையிலான ஆண்டுக்கு பேக்கேஜிங் தொடர்பான முடிவு இது. சணல் பைகளில் மட்டுமே 100 சதவீத உணவு தானியங்களை பொட்டலமிட வேண்டும். அதேபோல, சர்க்கரை பேக்கிங்கில் 20 சதவீதம் சணல் பைகளில் இருக்க வேண்டும்

';

அரசு அதிகாரப்பூர்வ வெளியீடு

இந்த திட்டம் இந்தியாவில் உள்ள சணல் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தித் துறையின் நலன்களைப் பாதுகாக்கும் என்று மத்திய அரசின் அறிவிக்கை தெரிவித்துள்ளது.

';

கோணிப்பைகளின் கொள்முதல்

12,000 கோடி மதிப்பிலான சணல் சாக்குகளை அரசு வாங்குகிறது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சணலில் சுமார் 65 சதவீதம் சணல் பேக்கேஜிங் பொருட்களுக்காக பயன்படுத்தப்படுகிறது

';

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சணல் பைகளில் பேக்கேஜிங் செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த முடிவு உதவும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

';

சணல் தொழில்

இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் குறிப்பாக மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சணல் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

';

கோணிப்பை

சணல் தொழிலின் மொத்த உற்பத்தியில் சணல் பைகள் 75 சதவிகிதம் ஆகும், இதில் 85 சதவிகிதம் இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் மாநில கொள்முதல் முகவர் (SPAs) ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது, மீதமுள்ளவை நேரடியாக ஏற்றுமதி/விற்பனை செய்யப்படுகின்றன.

';

VIEW ALL

Read Next Story