வீட்டு வைத்தியம்

வீட்டு வைத்தியம் செலவில்லாமல் நோய்களுக்கான தீர்வுகளை தருவதோடு, ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் மிகவும் நன்மை பயக்கும்.

';

ஆஸ்துமா

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளைச் செடியின் பூவைப் பறித்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

';

ரத்த சுத்திகரிப்பு

ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து வெறும் வயிற்றில் காலையில் உட்கொண்டால் இரத்த சுத்தமாகும்.

';

நீரிழிவு

நீரிழிவை கட்டுப்படுத்த நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும்.

';

நரம்பு தளர்ச்சி

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்

';

கண் பார்வை

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

';

இதயம்

பெரும் சீரக பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

';

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சமஅளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.

';

கபம்

வால்மிளகின் தூளை பாட்டிலில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

';

நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

';

வாய்ப்புண்

தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும்.

';

VIEW ALL

Read Next Story