வெந்தயம் நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு.
கர்ப்பிணிப் பெண்களும் வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இரத்தப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை சேர்த்து கொள்வது அவர்களது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை மிக ஆபத்தான அளவில் குறைக்க வழிவகுக்கும்.
பொட்டாசியம் அளவை குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் டயட்டில் அதிக அளவு வெந்தயம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வெந்தயத்தை அதிக அளவு உட்கொள்வதால், வாயு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு முகம் வீங்குவது, குமட்டல், தலைவலி, மூக்கடைப்பு, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்
தோல் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், தவறுதலாக கூட வெந்தயத்தை அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.