தொடர்ந்து யோகாசங்களை பயிற்சி செய்து வந்தால், உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.
தினமும் யோகா செய்வதால் உடலின் உறுதி மேம்பட்டு வலிமை அதிகரிக்கும்.
சில யோகாசனங்கள் தசைகளை வலுப்படுத்தி, உடலில், குறிப்பாக கைகள் மற்றும் கால்களின் வலிமையை அதிகரிக்கும்
பல யோகாசனங்களுக்கு சமநிலையும் முயற்சியும் மிக அவசியம் ஆகும். இது தொடர் பயிற்சியால் கிடைக்கும்.
யோகாசனங்களால் மனதில் தெளிவு பிறந்து குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
யோகாசனங்கள் சுவாசத்தை சீராக்கி நுரையீரல் திறனையும் ஒட்டுமொத்த சுவாச மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
இறுக்கத்தை தளர்த்தும் யோகாசனங்கள், முதுகு வலி போன்ற பல வித உடல் வலிகளை சரி செய்கிறது.
தொடர்ந்து யோகாசனங்களை செய்து வந்தால், நிச்சயமாக நல்ல உறக்கத்தை பெறலாம்.
யோகாசனங்கள் மூலமாக உடலின் ஆற்றல் பன்மடங்கு அதிகரித்து அன்றாட பணிகளை செய்ய நமக்கு உத்வேகம் கிடைக்கிறது.