பொதுவாக அனைவரும் காலை அல்லது மாலை ஆகிய இரண்டு வேளைகளில் உடற்பயிற்சி செய்கின்றனர்.
தற்போது அலுவலக பணி காரணமாக கண்ட நேரத்தில் சிலர் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
நாம் செய்யும் உடற்பயிற்சி நமக்கு எந்த மாதிரியான நன்மை, தீமை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் நேரம் அவரவர்களின் வாழ்க்கை முறையை பொறுத்தது ஆகும்.
காலையில் உடற்பயிற்சி செய்வது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, நாள் முழுவதும் சிறப்பான ஆற்றலை கொடுக்கிறது.
இருப்பினும், காலையில் சரியாக வார்ம் அப் செய்யவில்லை என்றால் காயம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.
சிலருக்கு மதிய நேர உடற்பயிற்சி சிறந்ததாக இருக்கலாம். இது செயல்திறனை மேம்படுத்துவதோடு, காயம் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.
மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, வேலை பளுவிற்கு பிறகு உடலுக்கு தேவையான ஓய்வெடுக்கும் சூழலை ஏற்படுத்தவும் உதவும்.
மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் சில நபர்களுக்கு தூக்கத்தின் தரத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.