கிரிக்கெட் வராலாற்றில் புதிய வரலாறு படைத்த ரச்சின் ரவீந்திரா

';

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்தரா இதுவரை இல்லாத ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.

';

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

';

சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரின் பெயரை கொண்டுள்ள இவர் இருவரையும் போலவே மகத்தான சாதனைகளை படைத்து வருகிறார்.

';

பெங்களூரில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி பேட்டிங் இறங்கியது. இந்த போட்டியில் தொடக்க வீரராக டிவோன் கான்வேயுடன் ரச்சின் ரவீந்திரா விளையாடினார்.

';

இதில் கான்வே 35 ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன்னுடன் ரச்சின் ரவீந்திரா இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார்.

';

ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்.

';

ஒரு பக்கம் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து பெவிலியின் திரும்ப ரவீந்திரா 88 பந்துகளில் எல்லாம் சதம் அடித்து அசத்தினார்.

';

இதனை பெரிய ஸ்கோராக மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரச்சின் ரவீந்திரார் 108 ரன்களில் வெளியேறினார்.

';

இதில் 15 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்று சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

';

அது மட்டுமல்லாமல் 48 ஆண்டுகால உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் உலகக் கோப்பையிலே மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா படைத்திருக்கிறார்.

';

இதேபோன்று 24 வயதுக்குள் உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் ரச்சின் ரவீந்தரா முறியடித்திருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story