யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) இந்தியாவில் பணம் செலுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
UPI வந்ததில் இருந்து, இந்தியாவில் பல டிஜிட்டல் லட்சம் பரிவர்த்தனைகள் தினசரி நடந்து வருகின்றன.
UPI பேமெண்ட்டுகளை இன்னும் சிறப்பாகச் செய்ய, அவ்வப்போது சில விதிகளும் மாற்றப்பட்டு வருகின்றன.
12 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத UPI ஐடிகள் மற்றும் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் செயலிழக்கப்படும்.
NPCI ஆனது UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய அதிகபட்ச தினசரி கட்டண வரம்பான ரூ.1 லட்சத்தை நிர்ணயித்துள்ளது.
ரூ. 2,000க்கு மேல் மற்றும் ஆன்லைன் வாலட்கள் போன்ற ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐ) மூலம் நடத்தப்படும் குறிப்பிட்ட வணிகர் UPI பரிவர்த்தனைகளுக்கு, 1.1 சதவீதம் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்படும்.
அதிகரித்து வரும் ஆன்லைன்மோசடிகளை குறைக்க புதிய பயனர்களுக்கு இடையே ரூ.2,000க்கு மேல் முதல் முறை பணம் அனுப்ப நான்கு மணிநேர கால வரம்பு இருக்கும்.
ஆர்பிஐ நாடு முழுவதும் UPI ATMகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஏடிஎம்கள் மூலம், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தை எடுக்க முடியும்.