இனி இவர்களுக்கு ஆர்டர் செல்லாது: ஸ்விகி அறிவிப்பு

';


உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் நகரங்களில் மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாக மாறி வருகிறது. அதில் குறிப்பாக உணவு டெலிவரி செய்வதில் ஸ்விக்கி நிறுவனம் மிக அழுத்தமாகத் தனது கால் தடத்தைப்பதித்து வெற்றி நடைபோடுகிறது.

';


ஆரம்பக் காலத்தில் பெரும்பாலும் ஆண்களே பணியாளர்களாக இருந்துவந்த நிலையில் பெண்களும் அதிகளவில் பணியாற்றத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

';


உணவு டெலிவரிக்கு செல்லும் பெண்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்களோ அல்லது வாடிக்கையாளரோ அல்லது சக பணியாளர்கள் யாரேனும் பாலியல் தொந்தரவு அளித்தால் ஸ்விக்கி நிறுவனத்தின் அவசர உதவி எண்ணிற்கு அவர்கள் புகார் தெரிவிக்கலாம்.

';


நிறுவனத்தில் முதற்கட்ட விசாரணைக்குப் பின் காவல்துறையிடம் புகாரளிக்க நடவடிக்கை எடுக்க ஸ்விக்கி துணை நிற்கும். பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் பணியாளர்கள் போலீசில் புகார் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேலும் ஸ்விகி நிறுவனத்தின் தரப்பிலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

';


அதன்படி ஸ்விக்கியின் பெண் பணியாளர்களைத் துன்புறுத்திய நபர் இனி உணவு ஆர்டர் செய்தால் பெண் பணியாளர்கள் டெலிவரி செய்யச் செல்லாத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

';


இதுகுறித்து பேசிய ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அதிகாரி மிஹிர் ஷா ”இந்த நடவடிக்கைகளின் மூலம் பெண் பணியாளர்கள் மீது தொடுக்கப்படும் அத்துமீறல்கள் குறையும் என நம்புகிறோம்,

';


மேலும் தவறு செய்தவர்கள் மீது பெண் பணியாளர்கள் தாமாக முன்வந்து புகாரளிக்க இது உந்து சக்தியாகத் திகழும். ஸ்விக்கி டெலிவரி பணிகளின் போது பெண் பணியாளர்கள் பாதுகாப்பே எங்கள் முதன்மை நோக்கம் என்கிறார்.

';

VIEW ALL

Read Next Story