ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை அதிகரித்து, அதன் மூலம், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை வழங்க இரும்பு சத்து மிக அவசியம்.
முருங்கை இலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, நெய் அல்லது தேனுடன் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஆற்றல் அபரிமிதமாக கிடைக்கும். ரத்த சோகை நீங்கும்.
இரவில் ஊறவைத்த ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையை காலை உணவில் எடுத்துக் கொள்வது உடனடி ஆற்றலை வழங்குவதோடு, இரும்புச்சத்தும் நிறைய கிடைக்கும்.
உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க, ஒரு கப் வேகவைத்த பீட்ரூட் மற்றும் கேரட்டை நறுக்கி, மிக்ஸியில் சேர்க்கவும். இந்த சாற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து தினமும் தவறாமல் உட்கொள்ளுங்கள்.
தினமும் காலையில் 1 டீஸ்பூன் கோதுமை புல் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்வது ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் உதவும்.
உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க, சுமார் 1 தேக்கரண்டி கருப்பு எள்ளை எடுத்து வறுக்கவும். இவற்றில் வெல்லம் தேன் மற்றும் நெய் சேர்த்து எள் உருண்டை தயாரித்து சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.