பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் முருங்கை இலையின் ஆரோக்கிய நன்மைகள் அற்புதமானவை. வெறும் வயிற்றில் முருங்கை இலை நீர் அல்லது முருங்கைக்கீரை சூப் குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலின் நச்சுத்தன்மையை நீக்குவது முதல் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பது வரை முருங்கைக்கீரை உடலுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது
பல்வேறு உணவுகளிலும் முருங்கை இலையை சேர்த்து சமைக்கலாம். பொரியல், காய், கூட்டு, பருப்புக்கூட்டு, முருங்கை இலை தோசை என விதவிதமாய் உண்டு ஆரோக்கியமாக வாழலாம்
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, சிறிய இஞ்சித்துண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேன் கலந்து பருகலாம். 15 மில்லி முருங்கை சாற்றை உயர் ரத்த அழுத்தம் குடித்து வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
முருங்கை இலையில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் குடித்து இதை குடித்துவந்தால், ஒரே மாதத்தில் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையை குறைக்கும்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ஆயுளை கூட்டுகிறது முருங்கை இலை
ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை இதில் இயற்கையாகவே உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் தேன் கலக்காமல் இந்த இலைச்சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் சர்க்கரையின் அளவு சீராகும்
முருங்கை இலையில் புரதம், இரும்புச் சத்து, கால்சியம், போன்றவற்றை அதிகமாக உள்ளதால், பெண்களின் இடுப்பு எலும்பை வலுப்படுத்தி மாதவிடாய் நேரத்தில் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலிக்கு நல்ல தீர்வாக அமைகிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை