ஒரு காலத்தில் மக்கள் தொகை பிரச்சனையில் சிக்கியிருந்த நாடு சீனா. மக்கள் தொகையை கட்டுப்படுத்த திருமண வயது வரம்பு, கருத்தடை, குழந்தை பெற்றுக் கொள்ள அரசிடம் அனுமதி என பல கட்டுப்பாடுகளை கொண்டிருந்தது சீனா
திருமணம் செய்துக் கொள்வதற்கும், திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டியிருந்ததால், படிப்படியாக அந்நாட்டு மக்களின் மனோபாவம் மாறத் தொடங்கியது
திருமணம் செய்யும் விகிதம் குறைந்ததால், நாட்டில் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை விரைவாக குறைந்துவருகிறது
குழந்தைப் பிறப்புக்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், தற்போது நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தடாலடியாக குறைந்துவிட்டது
குழந்தைப் பெற்றுக் கொள்ளும் விருப்பமும் மக்களின் மனதில் குறைந்ததால், தற்போது அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதமும் வீழ்ச்சியடைந்துவிட்டது
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்த சீனாவில், 1980 மற்றும் 2015 க்கு இடையில், திருமணமானவர்கர்ள், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்தியதை அடுத்து மக்கள்தொகை கணிசமாக குறைந்துள்ளது
குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததால், நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது அந்நாட்டிற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது
குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தற்போது ஊக்குவிக்கும் சீனா, திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 30 நாள் விடுப்புடன் கூடிய விடுமுறையை அளிக்கத் தொடங்கிவிட்டது