கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தம்பதியர் இருவர் பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலம் ரானகாத் பகுதியில் தம்பதியர் இருவர் தங்கள் குழந்தையுடன் மோட்டார் சைக்கில் வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பெற்றொர்கள் இருவரும் பலியாகினர்..


இந்த விபத்தில் இருந்து படுகாயங்களுடன் தப்பித்த 4-வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ரானகாத் சப் டிவிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.


சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


முதற்கட்ட விசாரணையில் பலியான தம்பதியர் சாத்தகிலிருந்து ரானாகத்திற்கு பயணித்ததாக தெரிகிறது. சம்பவத்தை நேரில் பார்த நபர் தெரிவிக்கையில், சாலையினை கடக்க முயன்ற போது இவர்களது வாகனத்தினை லாரி இடித்ததாக தெரிவித்துள்ளார்.


விபத்திற்கு பின்னர் லாரியினை விட்டுவிட்டு ஒட்டுநர் மற்றும் கிளினர் தப்பியோடியதாக கவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,. மேலும் தப்பித்து சென்றவர்களின் மீது காவல்துறை வழக்கு பதிந்து தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்!